மறந்தும் நீங்களாக ஆஸ்பிரின், பாராசிட்டமால் சாப்பிட வேண்டாம்.. திருப்பத்தூர் கலெக்டர் வார்னிங்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என கலெக்டர் சிவசவுந்தரவல்லி அறிவுறுத்தி உள்ளார். வெயில் தாக்கத்தின் போது ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை நீங்களாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கலெக்டர் சிவசவுந்தரவல்லி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவசவுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான பானங்கள் குடிப்பதை தவிர்க்கலாம். மோர் அதிகமாக குடிக்கலாம். உப்பு கலந்த மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசலை குடிக்க வேண்டும். வியர்வை வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை கூட குளிக்கலாம்.
ஒரு பாக்கெட் ஓ.ஆர்.எஸ். பொடியை 1 லிட்டர் சுத்தமான குடிநீரில் கலந்து, அதை 24 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். உடல் சோர்வு, மயக்கம் அதிகமாக இருந்தால் டாக்டரை அணுக வேண்டும். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக்கூடாது. டாக்டரின் ஆலோசனைபடி நடந்துகொள்ள வேண்டும்.
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம். சிறுவர்கள் மதிய நேரத்தில் வீட்டின் வெளியே விளையாடுவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், மது, புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். கோடை வெயிலால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்பு: வெயில் தாக்கத்தின் போது ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை நீங்களாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி














Click it and Unblock the Notifications