மோசமான அதிகாரிகளை பட்டையை உரிக்கப் போறேன்! எங்கிருந்து தான் வந்தார்களோ? டென்ஷன் ஆன துரைமுருகன்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு எங்கிருந்து தான் அதிகாரிகள் வந்தார்களோ தெரியவில்லை, மோசமாக செயல்படுகிறார்கள் என மூத்த அமைச்சரான துரைமுருகன் நொந்து போய் பேசியிருக்கிறார்.

எந்த சாலையை பார்த்தாலும் பள்ளமும் மேடுமாக இருக்கிறது என்று கூறிய துரைமுருகன், அதனை அதிகாரிகள் சரிவர கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு அமைச்சர், ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற உயர்ந்த பதவிகளில் இருக்கும் துரைமுருகனையே கடைசியில் இப்படி மேடையில் பேச வைத்துவிட்டார்கள் அதிகாரிகள்.

Duraimurugan has said that the Vellore Corporation does not know where the officials came from and they are working badly

இதனிடயே செயல்படாத அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஒரு பயனும் இல்லை என்பதை கூறிய அமைச்சர் துரைமுருகன், மோசமான அதிகாரிகளை பட்டையை உரிக்கப் போறேன் என மேடையிலேயே எச்சரிக்கும் டோனில் பேசினார். இன்று வேலூர் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து டோஸ் விடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துரைமுருகனின் கோபத்துக்கு காரணம், வேலூரிலும் சரி, காட்பாடியிலும் சரி சாலைகள் மோசமாக இருப்பதேயாகும். மழைக்காலம் வேறு வரவுள்ளதால் நிலைமை இன்னும் மோசமாகும். அதற்குள் நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிடும். இதனால் மக்களின் கோபம் எம்.பி. தேர்தலில் எதிரொலித்து கதிர் ஆனந்துக்கு அது சேதாரத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார் துரைமுருகன்.

இதனிடையே அமைச்சர் துரைமுருகன் தங்களிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறாரோ என வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எந்தெந்த அதிகாரிகள் மந்த கதியில் செயல்படுகிறார்கள் என்ற லிஸ்டை கவுன்சிலர்கள் அமைச்சர் வசம் கொடுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+