வேலூரில் ஓடும் ரயிலில் விழுந்த கணவர்.. பின்னாடியே மனைவி.. தடம் புரண்ட வாழ்க்கை.. கற்க வேண்டிய பாடம்
வேலூர்: வேலூர் காட்பாடி ரயிலில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. மும்பையில் உணவகம் நடத்தி வந்த சிவகண்டன் மற்றும் அவரது மனைவி கலையரசி ஆகியோரின் மரணம், ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது... இந்த தம்பதிக்கு என்னதான் ஆச்சு?
கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன், 37. இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

வேலூர் காட்பாடி ரயில்
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சிவகண்டன், சொந்தமாக ஹோட்டல் நடத்தி வந்தார். சிவகண்டனின் பாட்டி இறந்ததால், இறுதி சடங்குகளுக்கான காரியம், திருக்கோவிலுாரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள, மும்பையிலிருந்து திருநெல்வேலி செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் வந்துள்ளனர்..
ஓடும் ரயிலின் வாசல் அருகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கணவன் விழுந்துவிட்டார்.. இதை பார்த்து துடிதுடித்த மனைவி, கணவனை காப்பாற்ற போனார்.. கடைசியில் அவரும் ரயிலில் விழுந்து இறந்துவிட்டார்..
ஓடும் ரயிலில் சோகம்
தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் இந்த கோர விபத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்... உடனடியாக அந்த பகுதி மக்கள் களம்பூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி உடல்களை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊர் திரும்பிய தம்பதியினர், சடலமாக திரும்புவதை அந்தப் பகுதி மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. தன் பாட்டியின் காரியத்திற்காக வந்த சிவகண்டன், தன் மனைவியுடன் சேர்ந்து உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியும் உயிரிழப்பு
பாதுகாப்பற்ற முறையில் ரயிலின் கதவருகே நின்று பயணம் செய்வது எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
இவர்களின் மறைவால் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் அந்த 3 பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது... ஒரு கணம் செய்த கவனக்குறைவு, ஒரு அழகான குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. இதுபோன்ற விபத்துகள் இனி நிகழாமல் இருக்க, பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
3 பெண் குழந்தைகள்
இப்போது தம்பதி இருவரின் சடலங்களும், வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.. இருவரின் உடலை கண்டு மொத்த உறவினர்களின் அழுகுரல் அந்த இடத்தையே சோகமயமாக மாற்றியது. காட்பாடி ரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கதவோரம் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஆபத்தான செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல... பாவம் அந்த 3 பெண் குழந்தைகளும்!!!
-
போடு தகிட தகிட.. அடுத்த ஆக்சனுக்கு தயாரான ICF! ரெடியாகுது வந்தே பாரத் சரக்கு ரயில்! எல்லாம் மாறுதே! -
வேலூர் கணவனுக்கு மாத்திரை குழம்பு ஊற்றிய மோனிஷா.. உடனே வந்த காதலன்! மனைவியின் மாஸ்டர் பிளான் பின்னணி -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications