நீ இல்லைனா செத்துருவேன்! கள்ளகாதலிக்காக கழுத்தில் கயிறோடு லைவ்வில் மிரட்டிய ‘கச்சேரி பாடகர்’! ஷாக்!

Subscribe to Oneindia Tamil

வேலூர் : வேலூர் அருகே தன்னுடன் பேசாமல் இருந்த கள்ளக்காதலியை மிரட்டுவதற்காக தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற இசைக்கச்சேரி பாடகர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,இதுகுறித்த பதைபதைக்க வைக்கும் தற்கொலை வீடியோ வெளியாகியுள்ளது.

Recommended Video

    சிறுமியிடம் அத்துமீறிய மதபோதகர் | Vellore-ல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் *Crime

    வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜா இசை கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார்.

    ராஜாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேரி என்பவருடன் திருமணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது.

    கள்ளத்தொடர்பு

    கள்ளத்தொடர்பு


    இந்நிலையில். இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் ராஜாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மனைவி மேரிக்கு தெரியாமல் அந்தப் பெண்ணுடன் பொன்னை பகுதியிலேயே வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக மேரிக்கும் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

    குடும்ப தகராறு

    குடும்ப தகராறு

    அதே நேரத்தில் சித்ரா வேறு சில ஆண்களுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார். இந்த தகவல் ராஜாவுக்கு தெரிய வந்ததையடுத்து அடுத்து கள்ளத்தொடர்பில் இருந்த சித்ராவுக்கும், ராஜாவுக்கும் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா கடந்த சில நாட்களாக ராஜாவுடன் பேசாமல் இருந்ததோடு, செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். பலமுறை முயன்றும் அவருடன் பேச முடியாததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

     தற்கொலை மிரட்டல்

    தற்கொலை மிரட்டல்

    இதனால் சித்ராவை பயமுறுத்துவதற்காக, அறையில் படுத்திருந்த சித்ராவை மிரட்டிவிட்டு பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் இவர்கள் தங்கியுள்ள வீட்டின் ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதற்காக முயன்றுள்ளார். இதனை செல்போன் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இது குறித்து தகவல் அறிந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலுக்காக மனைவி பிள்ளைகளை விட்டு பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் பதபதைக்க வைக்கும் நேரலை காட்சி வெளியாகியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+