நீ இல்லைனா செத்துருவேன்! கள்ளகாதலிக்காக கழுத்தில் கயிறோடு லைவ்வில் மிரட்டிய ‘கச்சேரி பாடகர்’! ஷாக்!
வேலூர் : வேலூர் அருகே தன்னுடன் பேசாமல் இருந்த கள்ளக்காதலியை மிரட்டுவதற்காக தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற இசைக்கச்சேரி பாடகர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,இதுகுறித்த பதைபதைக்க வைக்கும் தற்கொலை வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜா இசை கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார்.
ராஜாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேரி என்பவருடன் திருமணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது.

கள்ளத்தொடர்பு
இந்நிலையில். இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் ராஜாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மனைவி மேரிக்கு தெரியாமல் அந்தப் பெண்ணுடன் பொன்னை பகுதியிலேயே வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக மேரிக்கும் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்ப தகராறு
அதே நேரத்தில் சித்ரா வேறு சில ஆண்களுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார். இந்த தகவல் ராஜாவுக்கு தெரிய வந்ததையடுத்து அடுத்து கள்ளத்தொடர்பில் இருந்த சித்ராவுக்கும், ராஜாவுக்கும் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா கடந்த சில நாட்களாக ராஜாவுடன் பேசாமல் இருந்ததோடு, செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். பலமுறை முயன்றும் அவருடன் பேச முடியாததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை மிரட்டல்
இதனால் சித்ராவை பயமுறுத்துவதற்காக, அறையில் படுத்திருந்த சித்ராவை மிரட்டிவிட்டு பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் இவர்கள் தங்கியுள்ள வீட்டின் ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதற்காக முயன்றுள்ளார். இதனை செல்போன் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலுக்காக மனைவி பிள்ளைகளை விட்டு பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் பதபதைக்க வைக்கும் நேரலை காட்சி வெளியாகியுள்ளது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications