அடப் பாவமே! 10ஆம் வகுப்பு பாஸ் ஆனது கூட தெரியாமல்.. மீண்டும் 10th படித்த மாணவர்.. எப்படி தெரியுமா
வேலூர்: அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், மீண்டும் ஓராண்டு முழுக்க 10ஆம் வகுப்பு படித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
அந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்து அனைத்து மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

மாணவர்கள்
கடந்த 2020-21 கல்வி ஆண்டிலும் கிட்டதட்ட அதே நிலை தான். மாணவர்களுக்கு அந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இறுதி தேர்வு சமயத்தில் டெல்டா கொரோனா காரணமாக 2ஆம் அலை ஏற்படவே தேர்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அப்படிதான், 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

10ஆம் வகுப்பு
அதன்படி கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், இந்த ஆண்டு மீண்டும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளிகளில் தேர்ச்சி
கடந்த ஆண்டு கொரானா ஊரடங்கு காரணமாகத் தமிழக அரசு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருந்தது. வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு 10ஆம் பகுப்பு படித்து, தேர்ச்சி பெற்ற மாணவன் கணேசன் தேர்ச்சி பெற்றது அவருக்குத் தெரியவில்லை. ஆசிரியர்களும் கூட இது தொடர்பாக மாணவருக்கு எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. .

அட்மிஷன்
இதன் காரணமா அந்த மாணவர் மீண்டும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பிற்கு அட்மிஷன் செய்து படித்து வந்துள்ளார். அதேநேரம் அவருடன் படித்த பிற மாணவர்கள் +1 படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில். 10ஆம் வகுப்புத் தேர்வுக்கு கணேசனக்கு ஹால் டிக்கெட்டும் கூட வந்துள்ளது.

தலைமை ஆசிரியை
இந்த நிலையில், இப்போது தான் பள்ளியின் தலைமை ஆசிரியை, "நீ கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டதால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டாம்" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவரும் அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனை மீண்டும் அட்மிஷன் செய்து அதே வகுப்பு படித்துள்ளான். இச்சம்பவம் அங்குச் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications