அடப் பாவமே! 10ஆம் வகுப்பு பாஸ் ஆனது கூட தெரியாமல்.. மீண்டும் 10th படித்த மாணவர்.. எப்படி தெரியுமா
வேலூர்: அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், மீண்டும் ஓராண்டு முழுக்க 10ஆம் வகுப்பு படித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
அந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்து அனைத்து மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

மாணவர்கள்
கடந்த 2020-21 கல்வி ஆண்டிலும் கிட்டதட்ட அதே நிலை தான். மாணவர்களுக்கு அந்த கல்வியாண்டு முழுவதும் ஆன்லைன் மூலமே மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இறுதி தேர்வு சமயத்தில் டெல்டா கொரோனா காரணமாக 2ஆம் அலை ஏற்படவே தேர்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. அப்படிதான், 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

10ஆம் வகுப்பு
அதன்படி கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் ஒருவர், இந்த ஆண்டு மீண்டும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளிகளில் தேர்ச்சி
கடந்த ஆண்டு கொரானா ஊரடங்கு காரணமாகத் தமிழக அரசு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருந்தது. வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு 10ஆம் பகுப்பு படித்து, தேர்ச்சி பெற்ற மாணவன் கணேசன் தேர்ச்சி பெற்றது அவருக்குத் தெரியவில்லை. ஆசிரியர்களும் கூட இது தொடர்பாக மாணவருக்கு எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. .

அட்மிஷன்
இதன் காரணமா அந்த மாணவர் மீண்டும் அதே பள்ளியில் 10ஆம் வகுப்பிற்கு அட்மிஷன் செய்து படித்து வந்துள்ளார். அதேநேரம் அவருடன் படித்த பிற மாணவர்கள் +1 படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில். 10ஆம் வகுப்புத் தேர்வுக்கு கணேசனக்கு ஹால் டிக்கெட்டும் கூட வந்துள்ளது.

தலைமை ஆசிரியை
இந்த நிலையில், இப்போது தான் பள்ளியின் தலைமை ஆசிரியை, "நீ கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டதால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டாம்" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு மாணவரும் அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனை மீண்டும் அட்மிஷன் செய்து அதே வகுப்பு படித்துள்ளான். இச்சம்பவம் அங்குச் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications