பாஜகவுக்கு எதிர்ப்பு! டீஸ்டா செதல்வாட்டை விடுவிக்ககோரி களமிறங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வேலூர்: குஜராத் கலவரத்தில் நீதி கோரியும், கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீகுமார் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேண்டும் எனவும், இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் பாஜக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
வேலூர்மாவட்டம் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ். அமைப்புகளை கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
பாஜக அரசு தங்களுக்கு எதிராக போராடும் இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் வீடுகளை எந்த வித முன் அறிவிப்புமின்றி இடித்து அகற்றுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் குஜராத் கலவரம் குறித்து நியாயம் கிடைக்க யாரெல்லாம் வழக்கு தொடுத்தனரோ அவர்களையே கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜி ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
உத்தபிரதேசம்,மத்திய பிரதேசம் டெல்லி ஆகிய இடங்களில் பாஜக அரசு சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்துள்ளனர். மேலும் குஜராத் கலவரம் தொடர்பாக நியாயம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாபி, மற்றும் மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செதல்ட்வாட் வழக்கு தொடர்ந்தனர். தற்போது டீஸ்டா செதல்வாட், ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீகுமார் மீதும் வழக்கு தொடர உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வேதனை அளிக்கிறது. டீஸ்டா செதல்வாட் , ஸ்ரீகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர் .இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications