For Daily Alerts
Just In
மண்டல பூஜைக்காக நடைதிறப்பு... சுருளி அருவில் மாலை அணிய குவியும் ஐயப்ப பக்தர்கள்- வீடியோ
தேனி: சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணியத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் தேனி மாவட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சுருளி அருவியில் குவிய தொடங்கினர். அவர்கள் புனித அருவியில் குளித்து விட்டு சுரபி நதிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
Comments
sabarimalai ayyappa devotees theni suruli falls fasting oneindia tamil videos சபரிமலை ஐயப்பன் கோவில் ஐயப்ப பக்தர்கள் தேனி சுருளி அருவி விரதம் மாலை ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Theni Suruli falls, lot of Ayyappa devotees started fasting as the Mandala pooja have started in Sabarimala Ayyappan temple.
Story first published: Thursday, November 17, 2016, 15:42 [IST]