ஸ்டாலின் வழி.. பெரியார் வழி! அன்று பெண்கள் ஒடுக்கப்பட்டனர் - இன்றோ.. இதான் திராவிட மாடல் - பொன்முடி
விழுப்புரம்: ஒடுக்கப்பட்ட மகளிருக்கு கல்வி உட்பட அனைத்திலும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்துள்ளது மனம்பூண்டி கிராமம். இப்பகுதியில் இன்று காலை புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், ஒன்றிய சேர்மன், அரசு அதிகாரிகள், திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி திமுக அரசின் சாதனைகளையும், செயல்பாடுகளையும், திராவிட மாடல் ஆட்சியை பற்றியும் விளக்கி பேசினார். அப்போது அவர், "ஒரு காலத்தில் மகளிர் என்றாலே ஒடுக்கப்பட்டவர்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மகளிருக்கு படிப்பு உட்பட அனைத்திலும் இடமளிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதைத்தான் சொல்லி இருக்கிறார். தந்தை பெரியாரும் இதைத்தான் சொன்னார். ஆணும் பெண்ணும் சமம். இங்கே பாருங்கள்! இந்த ஊருக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு மகளிர் ஒன்றிய சேர்மனாகி இருக்கிறார் என்றால் அதுதான் திராவிட மாடல்.
ஊராட்சி, ஒன்றிய தலைவர் பொறுப்புகள் எல்லாவற்றிலும் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் என்றாலே ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி அனைத்திலும் இடம் பெற செய்துள்ளோம்." என்றார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications