அல்லேலுயா என்பதால் என்ன பிரச்சினை? கிறிஸ்தவ பள்ளிகளால் கல்வி கிடைத்தது.. அமைச்சர் மஸ்தான் பேச்சு!
விழுப்புரம்: திருவண்ணாமலைக்கு சென்றால் அரோகரா என்கிறோம், முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றால் அல்லாஹு அக்பர் என்கிறோம், அதேபோல் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்றால் அல்லேலூயா என்கிறோம். அல்லேலூயா என்று கூறுவதால் ஒரு கூட்டத்திற்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். குறிப்பாக தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மாநாட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத்தன்மை உடன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகளை போல் அல்லாமல் தற்போது நிதிநிலை சீரடைந்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
வரும் காலங்களில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும். முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. தமிழகத்தின் நிதிநிலை சீரானதும் அனைவரது எண்ணமும் நிறைவேறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மஸ்தான்
தொடர்ந்து, மரக்காணத்தில் நடைபெற்ற சேவியர் ஜீசஸ் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் செஞ்சி மஸ்தான் பேசுகையில், அனைத்து மதங்களிலும் ஒரே கருத்து தான் போதிக்கப்படுகிறது. இந்து கோயிலுக்கு போனால் திருவண்ணாமலைக்கு சென்றால் அரோகரா என்கிறோம். முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றால் அல்லாஹு அக்பர் என்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சி
அதேபோல் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்றால் அல்லேலூயா என்கிறோம். அல்லேலூயா என்று கூறுவதால் ஒரு கூட்டத்திற்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. அனைவரும் ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும். இந்த முன்னோட்டத்தில் தான் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.

கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள்
அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் கிறிஸ்துவ பள்ளிக் கூடங்கள். அதன்மூலம் பல்வேறு தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவை பெற்றுள்ளனர். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications