அல்லேலுயா என்பதால் என்ன பிரச்சினை? கிறிஸ்தவ பள்ளிகளால் கல்வி கிடைத்தது.. அமைச்சர் மஸ்தான் பேச்சு!
விழுப்புரம்: திருவண்ணாமலைக்கு சென்றால் அரோகரா என்கிறோம், முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றால் அல்லாஹு அக்பர் என்கிறோம், அதேபோல் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்றால் அல்லேலூயா என்கிறோம். அல்லேலூயா என்று கூறுவதால் ஒரு கூட்டத்திற்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். குறிப்பாக தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து மாநாட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத்தன்மை உடன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகளை போல் அல்லாமல் தற்போது நிதிநிலை சீரடைந்து வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
வரும் காலங்களில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும். முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. தமிழகத்தின் நிதிநிலை சீரானதும் அனைவரது எண்ணமும் நிறைவேறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு சம்பளமும் உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மஸ்தான்
தொடர்ந்து, மரக்காணத்தில் நடைபெற்ற சேவியர் ஜீசஸ் சர்ச்சில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் செஞ்சி மஸ்தான் பேசுகையில், அனைத்து மதங்களிலும் ஒரே கருத்து தான் போதிக்கப்படுகிறது. இந்து கோயிலுக்கு போனால் திருவண்ணாமலைக்கு சென்றால் அரோகரா என்கிறோம். முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சென்றால் அல்லாஹு அக்பர் என்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சி
அதேபோல் கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்றால் அல்லேலூயா என்கிறோம். அல்லேலூயா என்று கூறுவதால் ஒரு கூட்டத்திற்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. அனைவரும் ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும். இந்த முன்னோட்டத்தில் தான் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.

கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள்
அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் கிறிஸ்துவ பள்ளிக் கூடங்கள். அதன்மூலம் பல்வேறு தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவை பெற்றுள்ளனர். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications