வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2022-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.. அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

 2022-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரான்ஸ் எழுத்தாளருக்கு அறிவிப்பு! 2022-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரான்ஸ் எழுத்தாளருக்கு அறிவிப்பு!

 பொருளாதாரத்துக்கான..

பொருளாதாரத்துக்கான..

அந்த வகையில் நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்காவை பென் பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துகான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 மக்களின் உரிமைக்காக போராடியதற்காக

மக்களின் உரிமைக்காக போராடியதற்காக

அமைதிக்கான நோபல் பரிசை 2 அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பெலாரசை சேர்ந்த வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதேபோல், ரஷ்யாவின் மெமோரியல் என்ற மனித உரிமை அமைப்புக்கும் உக்ரைனின் சிவில் லிபர்டி என்ற மனித உரிமை அமைப்புக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறைக்கு

மருத்துவத்துறைக்கு

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு வழங்கப்பட்டது. நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 இயற்பியல், வேதியல்

இயற்பியல், வேதியல்

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அலைன் ஆஸ்பெக்ட் (பிரான்ஸ்), ஜான் எப் கிளாசர் (அமெரிக்கா), ஆண்டன் ஜீலிங்கர் (ஆஸ்திரியா) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. வேதியிலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் கரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவின் பேரி ஷார்ப்லெஸ் அகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக ஆனி எர்னாக்ஸூக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பாலின பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்பட்டு வருகிறார்.

English summary
It has been announced that the 2022 Nobel Prize in Economics will be awarded to 3 Americans for their research on the financial crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X