Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுப்பூசி போடாமல் எப்படி ஆபீஸுக்கு வரலாம்.. 3 ஊழியர்களை.. வேலையை விட்டுத் தூக்கிய சிஎன்என்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சிஎன்என் நிறுவனம் கொரோனா தடுப்பூசி போடத் தவறிய தனது 3 ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இந்த மூவரும் அலுவலகத்திற்கு வந்ததால் இந்த நடவடிக்கையை சிஎன்என் எடுத்துள்ளது.

இதுகுறித்து கூறிய சிஎன்என் நிறுவன தலைவர் ஜெப் சக்கர், 3 பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு வந்தது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் நாங்கள் பொறுமை காட்ட முடியாது என்றார் அவர்.

3 ஊழியர்கள் நீக்கம்

3 ஊழியர்கள் நீக்கம்

முன்னதாக இந்த மூன்று பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலுவலகம் வந்தது தொடர்பாக புகார் மேலிடத்திற்குச் சென்றது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு இவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு மூன்று பேரும் விளக்கம் அளித்தனர். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர். இதையடுத்து அலுவலக கொள்கை முடிவை மீறும் வகையில் செயல்பட்டதால் 3 பேரையும் நீக்கி உத்தரவிட்டது நிறுவனம்.

அக்டோபர் முதல் ஆபீஸ் திறப்பு

அக்டோபர் முதல் ஆபீஸ் திறப்பு

இதற்கிடையே, அக்டோபர் மாதத்திலிருந்து அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் இயல்பு நிலைக்குத் திரும்பவுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. முன்னதாக இதை செப்டம்பர் 7ம் தேதி முதல் என்று நிர்ணயித்திருந்தது. அது தற்போது அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இதையும் சக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து சக்கர் கூறுகையில், இது எளிதான முடிவு அல்ல. மிகுந்த பரிசீலனைக்குப் பிறகே தள்ளிப் போட்டுள்ளோம். விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார் சக்கர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்

பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்

சக்கர் மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும். இது கட்டாயம். கொரோனா குறித்த விழிப்புணர்வு மட்டும் அல்லாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதொடர்பான பயம், குழப்பம், பதட்டம், விரக்தி அனைவரிடத்திலும் இருக்கவே செய்யும். அதை மறுப்பதற்கில்லை. எனக்கும் கூட இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியது இப்போதைய அவசியமாகும் என்றார்.

மைக்ரோசாப்ட்டும் கட்டாயம்

மைக்ரோசாப்ட்டும் கட்டாயம்

இதற்கிடையே தடுப்பூசி போடாத 3 ஊழியர்களை சிஎன்என் நீக்கியுள்ளது மீடியா உலகில் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு முழு அளவில் திரும்புவதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி தனது அமெரிக்க அலுவலகங்களை திறக்கவுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதற்கு முன்பு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.

ஊசி போடாட்டி வராதீங்க

ஊசி போடாட்டி வராதீங்க

செப்டம்பர் மாதம் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கவுள்ளது. ஊழியர்கள் மட்டுமல்லாமல், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பிற ஊழியர்களுக்கும், விசிட்டர்களுக்கும் கூட தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
    அமேசான் - கூகுள் - பேஸ்புக்

    அமேசான் - கூகுள் - பேஸ்புக்

    இதேபோல இ காமர்ஸ் நிறுவனமான அமேசானும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கியுள்ளது. தனது அலுவலகங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இது திறக்கத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில் திறக்க அது தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது அதைத் தள்ளிப் போட்டு விட்டது. தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும்போது , முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இதேபோலத்தான் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+