தடுப்பூசி போடாமல் எப்படி ஆபீஸுக்கு வரலாம்.. 3 ஊழியர்களை.. வேலையை விட்டுத் தூக்கிய சிஎன்என்
வாஷிங்டன்: சிஎன்என் நிறுவனம் கொரோனா தடுப்பூசி போடத் தவறிய தனது 3 ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத இந்த மூவரும் அலுவலகத்திற்கு வந்ததால் இந்த நடவடிக்கையை சிஎன்என் எடுத்துள்ளது.
இதுகுறித்து கூறிய சிஎன்என் நிறுவன தலைவர் ஜெப் சக்கர், 3 பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலுவலகத்திற்கு வந்தது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் நாங்கள் பொறுமை காட்ட முடியாது என்றார் அவர்.

3 ஊழியர்கள் நீக்கம்
முன்னதாக இந்த மூன்று பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் அலுவலகம் வந்தது தொடர்பாக புகார் மேலிடத்திற்குச் சென்றது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டு இவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு மூன்று பேரும் விளக்கம் அளித்தனர். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர். இதையடுத்து அலுவலக கொள்கை முடிவை மீறும் வகையில் செயல்பட்டதால் 3 பேரையும் நீக்கி உத்தரவிட்டது நிறுவனம்.

அக்டோபர் முதல் ஆபீஸ் திறப்பு
இதற்கிடையே, அக்டோபர் மாதத்திலிருந்து அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் இயல்பு நிலைக்குத் திரும்பவுள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. முன்னதாக இதை செப்டம்பர் 7ம் தேதி முதல் என்று நிர்ணயித்திருந்தது. அது தற்போது அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. இதையும் சக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து சக்கர் கூறுகையில், இது எளிதான முடிவு அல்ல. மிகுந்த பரிசீலனைக்குப் பிறகே தள்ளிப் போட்டுள்ளோம். விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார் சக்கர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்
சக்கர் மேலும் கூறுகையில், கொரோனா தடுப்பூசி அனைவரும் போட வேண்டும். இது கட்டாயம். கொரோனா குறித்த விழிப்புணர்வு மட்டும் அல்லாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதுதொடர்பான பயம், குழப்பம், பதட்டம், விரக்தி அனைவரிடத்திலும் இருக்கவே செய்யும். அதை மறுப்பதற்கில்லை. எனக்கும் கூட இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டியது இப்போதைய அவசியமாகும் என்றார்.

மைக்ரோசாப்ட்டும் கட்டாயம்
இதற்கிடையே தடுப்பூசி போடாத 3 ஊழியர்களை சிஎன்என் நீக்கியுள்ளது மீடியா உலகில் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு முழு அளவில் திரும்புவதற்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி தனது அமெரிக்க அலுவலகங்களை திறக்கவுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். அதற்கு முன்பு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.

ஊசி போடாட்டி வராதீங்க
செப்டம்பர் மாதம் முதல் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கவுள்ளது. ஊழியர்கள் மட்டுமல்லாமல், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பிற ஊழியர்களுக்கும், விசிட்டர்களுக்கும் கூட தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

அமேசான் - கூகுள் - பேஸ்புக்
இதேபோல இ காமர்ஸ் நிறுவனமான அமேசானும் தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கியுள்ளது. தனது அலுவலகங்களை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் இது திறக்கத் திட்டமிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில் திறக்க அது தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது அதைத் தள்ளிப் போட்டு விட்டது. தனது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும்போது , முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இதேபோலத்தான் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளன.
-
30 வருட அமெரிக்க ஆதிக்கத்தை.. உடைத்த ஈரான்.. தயாராக இருங்க.. உலகம் பெரிய மாற்றத்தைச் சந்திக்குது -
காலியான வீதிகள்.. விழி பிதுங்கும் தொழிலதிபர்கள்.. ஆள் இல்லாத "அமீரகம்".. கோஸ்ட் டவுன் துபாய்! -
நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்க போகுது.. காத்திருங்கள்.. புதிர் போடும் இஸ்ரேல் நெதன்யாகு.. கொடுமை -
கச்சா எண்ணெய் தோண்டிய படுகுழி.. காலில் கோடாரியை போட்ட டிரம்ப்.. அமெரிக்க டாலர் சாம்ராஜ்ஜியம் ஓவர்! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்












Click it and Unblock the Notifications