அமெரிக்காவில் கார் மீது வாகனம் மோதி விபத்து.. 3 இந்திய மாணவர்கள் பலி.. 4 பேர் படுகாயம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் 3 பேர் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நியூ ஹேவன் பல்கலைக்கழகம் மற்றும் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இதில் இந்த இரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் சிலர் நேற்று காரில் வெளியே புறப்பட்டு சென்றிருந்தனர்.
அதிகாலை நேரத்தில் அவர்களது கார் மீது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் மோதியது. மாணவர்கள் சென்ற கார் மீது வாகனம் மோதியதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரில் இருந்த இந்திய மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு வாகனத்தில் வந்த கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தில் பலியானவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிரேம்குமார் ரெட்டி கோடா (வயது 27), பவானி குல்லப்பள்ளி (22)மற்றும் சாய் நரசிம்ம பாடம்செட்டி (22) ஆகிய 3 இந்திய மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்துள்ளது.
இதேபோல காயமடைந்த மனோஜ் ரெட்டி டோண்டா (23), ஸ்ரீதர் ரெட்டி சிந்தகுண்டா(22), விஜித் ரெட்டி கும்மாலா (23) மற்றும் ஹிமா ஐஸ்வர்யா சித்திரெட்டி (22) ஆகிய 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தில் இருந்த ஒருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் குறித்து அறிய இந்திய தூதரத்தில் இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications