இந்தியாவில் பரவும் பி.1.617 உருமாறிய வைரஸ் மூன்றாக உருமாறும் : உலகச் சுகாதார அமைப்பு
இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வேரியண்ட் பி.1.617 உருமாறிய வைரஸ் ஆகும். இது மூன்றாக உருமாறும் தன்மை உடையது.
வாஷிங்டன்: இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வைரஸ் முழுதுமே கவலையளிக்கக் கூடிய பெரிய அச்சுறுத்தல் என்று கூறிய உலகச் சுகாதார அமைப்பு தற்போது B.1.617.2 உருமாறிய கொரோனா வைரஸ்தான் கவலையளிக்க கூடிய ஒரே வேரியண்ட் என்று தெரிவித்துள்ளது. இது மூன்றாக உருமாறும் தன்மை உடையது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகச் சுகாதார அமைப்பு தனது வாரந்திர தொற்று நோய் புதிய அறிவிப்பில், B.1.617.2 வேரியண்ட் மட்டும்தான் இப்போது மக்களிடத்தில் பரவும் பெரிய ரிஸ்க்கான வைரஸ் ஆகும் பி.1.617 வைரஸ்கள் மற்ற பிரதிகள் அல்லது உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் குறைந்த அளவில்தான் பரவுகிறது என்று கூறியுள்ளது.

ஆகவே B.1.617.2 உருமாறிய கொரோனா தான் இப்போது கவலையளிக்க கூடிய வேரியண்டாக உள்ளது. அதாவது டெல்டா என்று கிரேக்க பெயரிடப்பட்ட வேரியண்ட் மட்டும்தான் இப்போது கவலையளிக்கக் கூடியதாக உள்ள்து.
முன்னதாக இந்தியாவில் கண்டறியப்பட்ட, பி.1.617.1 மற்றும் பி.1.617.2 ஆகிய இருவகை கொரோனா வைரஸ்களுக்கு, முறையே, கப்பா மற்றும் டெல்டா என, கிரேக்க மொழியால் ஆன பெயர்களை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.
புதிய வகை உருமாறிய வைரசை, அது கண்டறியப்பட்ட நாட்டின் பெயருடன் சேர்த்து அழைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கிரேக்கப் பெயரை உலகச் சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது.
இந்த பி.1.617.2 என்ற வேரியண்ட் தான் தற்போது சில நாடுகளில் பரவி வருவகிறது. இந்த வேரியண்ட் குறித்த மேல் ஆய்வுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று உலகச் சுகாதார அமைப்பு கூறுகிறது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் கொரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
வியட்நாமில் பரவி வரும் கொரோனா வகை பிரிட்டன் மற்றும் டெல்டா வகையின் கூட்டுக்கலவை என்று உலகச் சுகாதார அமைப்பு கூறியிருந்தது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications