பிரதமர் மோடியையும் முகம்மது பின் சல்மானையும் ஒப்பிடுவதா? அமெரிக்காவை கடுமையாக சாடிய இந்தியா
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட ரீதியான சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியையும் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானையும் ஒப்பிட்டு அமெரிக்கா கருத்து தெரிவித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கருத்து அவசியமற்றது மற்றும் தேவையற்றது என்றும் உண்மை நிலைக்கு மாறானது என்றும் இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்தது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதாக விமர்சித்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் USCIRF அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மோடியின் பெயர் அமெரிக்க விசா தடை பட்டியலில் இணைக்கப்பட்டது.

சட்டரீதியிலான விலக்குகளை
அதன்பிறகு இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு இந்த தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது. இந்த நிலையில், சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை விமர்சித்ததற்காக ஜமோல் கசோக்கி என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் பெயரும் அடிபட்டு வருகிறது. அமெரிக்கா கூட இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா தற்போது சவுதி பட்டத்து இளவரசருக்கு சட்டரீதியிலான விலக்குகளை( immunity) அளித்து இருக்கிறது.

அடுக்கடுக்கான கேள்விகள்
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் அமெரிக்க பத்திரிகையாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த வேதாந்த் படேல் கூறுகையில், ''சவுதி அரேபியாவின் அரச தலைவராக முகம்மது பின் சல்மான் புதிய பதவி வழங்கப்பட்டு இருப்பதால் இத்தகைய விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்கு முன்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, காங்கோ நாட்டு முன்னாள் அதிபர் லரண்ட் கபிலா மற்றும் ஹைதி முன்னாள் அதிபர் ஜீந்பெர்டாண்ட் அரிஸ்டைட் ஆகியோருக்கும் இதேபோன்ற தடை விலக்கு சலுகை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பதிலளித்தார்.

தொடர்பு இல்லாதது, பொருத்தமற்றது
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரின் இந்த கருத்துக்குத்தான் இந்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, பிரதமர் மோடிக்கு 2014 முதல் அளிக்கப்பட்டு இருக்கும் விதிவிலக்கையும் தற்போது சவுதி பட்டத்து இளவரசருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் சட்டரீதியிலான விதிவிலக்கோடு ஒப்பிட்டு பேசியிருப்பது, தொடர்பு இல்லாதது, பொருத்தமற்றது என்று சாடியுள்ளார்.

அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை
மேலும், பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தாக வெளியான தகவல் குறித்தும் பேசிய அரிந்த பக்சி, மத்திய அரசிடம் அதுபோன்ற எந்த திட்டமும் இல்லை. பிரதமர் மோடியும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பலமுறை சந்தித்து பேசியிருக்கின்றனர். பாலியில் நடைபெற்ற ஜி 20மாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தோனேசியா அதிபருடன் சேர்த்து முத்தரப்பு சந்திப்பும் நடைபெற்றது" என்றார்.

போதிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது
அதேபோல், மதசுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க காங்கிரசின் அப்டேட் செய்யப்பட்ட அறிக்கையை கடுமையாக சாடிய அரிந்தம் பக்சி, "இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமான மற்றும் தவறான மதிப்பீடுகளை கொண்ட USCIRF- இன் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். உண்மை நிலைகளை தவறாக சித்தரித்து காட்டும் அவர்களின் போக்கு இந்தியாவை பற்றியும் அதன் அரசியல் அமைப்பு மற்றும் பன்முகத்தன்மை, வலுவான ஜனநாயக அமைப்பு குறித்த போதிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது" என்றார்.
-
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications