அமெரிக்காவில் சூட்கேஸில் இருந்த மாட்டுச்சாண வறட்டிகள்.. விமானத்தில் கொண்டு சென்ற இந்திய பயணி!
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்ற பயணி ஒருவரின் சூட்கேஸில் மாட்டு சாண வறட்டிகள் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video
இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் மாட்டு சாணம் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாட்டு சாணத்தின் மகிமை
இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் வீடுகளை சுற்றி விஷ பூச்சிகள், கிருமிகள் அண்டாத வகையில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து வீட்டின் முன்பு தெளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர நன்கு உதவுவதால் மாட்டு சாணத்தை உரமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர மாட்டு சாணம் சமையல் எரிவாயுவாகவும் பயன்பட்டு வருகிறது. இத்தகைய மதிப்பு மிகுந்த மாட்டு சாணத்தின் தேவை பல்வேறு நாடுகளில் அதிகரிதது விட்டன.

ஆன்லைனில் விற்பனை
அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் "cow dung" என்ற பெயரில் மாட்டுச் சாண வறட்டியை விற்று வருகின்றன.பல்வேறு நாடுகளில் மாட்டு சாணத்துக்கு கிராக்கி ஏற்படுவதால் அங்கு இந்தியாவில் இருந்து மாட்டு சாணம் கொண்டு செல்கின்றனர். இப்படி மாட்டு சாணத்தை சூட்கேசில் அடைத்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சூட்கேஸில் மாட்டு சாணம்
அமெரிக்காவின் வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் உடைமைகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டனர். 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற சூட்கேஸை சோதனை செய்தபோது அதில் மாட்டுச் சாண வரட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சூட்கேஸ் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒரு பயணிக்கு சொந்தமானது தெரியவந்தது.

அமெரிக்காவில் தடை
ஆனால் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மாட்டு சாண வறட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அதனை அதிகாரிகள் அழித்தனர். கால்நடைகள் மத்தியில் காணப்படும் 'கோமாரி' என்னும் நோய் பரவலை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் மாட்டு சாண வறட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications