அமெரிக்க அதிபர் தேர்தல்.. வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. வெல்லப்போவது யார்?
வாஷிங்டன்: இன்று நடந்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் அமெரிக்கர்கள் ஓட்டுப்போட்டுள்ளனர். இதனால் இந்த தேர்தலில் வெல்லப்போவது ட்ரம்பா அல்லது ஜோ பிடனா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர், இது இந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பு நடந்த மிக பெரிய வாக்குப்பதிவு ஆகும். இந்த தேர்தலில் மொத்தம் சுமார் 239 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். மெயில்-இன் வாக்குச்சீட்டுகள் சில மாநிலங்களில் கணக்கிட நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம் என்பதால் இன்றைய வாக்கெடுப்பு முடிந்த சில மணிநேரங்களில் வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்க முடியாது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெளியிட்ட ட்வீட் பதிவில், "2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில், பராக் ஒபாமாவுடன் இந்த நாட்டை வழிநடத்த உதவுவதற்காக நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள். இன்று, நான் மீண்டும் உங்கள் நம்பிக்கையை கேட்கிறேன் - இந்த முறை, கமலா ஹாரிஸ் உடன் இணைந்து இந்த தேசத்தின் ஆத்மாவை நாங்கள் சரி செய்வோம். - நாங்கள் உங்களை மோசமான நிலைக்கு தள்ள மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
தேர்தல் இன்று நடைபெறறு வரும் நிலையில் முன்னதாக நேற்று தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று, வட கரோலினா, பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய நான்கு மாகாணங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.
செவ்வாய்க்கிழமை, உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு) வாக்குப்பதிவு தொடங்கியது. அமெரிக்க நேரப்படி இரவு 9 மணிக்கு முன்பு வாக்குப்பதிவு முடிகிறது. அதாவது இந்திய நேரப்படி காலை 7.30 மணி அளவில் அமெரிக்கா வாக்குப்பதிவு நிறைவு பெறும். இந்தியாவிற்கும் அமெரிக்காவில் உள்ள நகரங்களும் இடையே 10½ முதல் 13½ மணிநேரம் நேர வித்தியாசம் உள்ளது.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் கணக்குப்படி அமெரிக்க தேர்தலில் , 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக, வாக்கு எண்ணிக்கை அதிக நேரம் ஆகலாம், ஏனெனில் சில மாநிலங்கள் வாக்குப்பதிவு நாள் வரை வாக்குச்சீட்டு பெட்டியை திறக்காது என்பதால் முடிவுகள் வெளியாக நீண்ட நாட்கள் ஆகலாம். வெற்றி பெறுபவர் 20ம் தேதி அதிபராக பதவி ஏற்பார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications