அமெரிக்காவில் எதிரொலிக்கும் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்.. விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்
வாஷிங்டன்: பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருச்சியில் பிறந்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. சமூக செயற்பாட்டாளரான இவர் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார்.
இவர் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் எல்கார் பரிஷத் கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறி 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.

84 வயதில் இறந்த ஸ்டேன் சுவாமி
இதையடுத்து அவர் மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டார். 2021 ஜூலை 5ல் தனது 84வது வயதில் இவர் இறந்தார். இவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்ததே இறப்புக்கான காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவரது மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைள் எழுந்தன.

கோரிக்கையை நிராகரித்த இந்தியா
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் அலுவலகம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி மற்றும் மனித உரிமைகள் கொள்கை மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஜெர்மன் ஆணையர் ஆகியோரும் கவலை தெரிவித்திருந்தனர். ஆனால், பாதிரியாா் ஸ்டேன் சுவாமி சட்டத்தின்படியே நடத்தப்பட்டதாக கூறி சர்வதேச விமர்சனங்களை இந்தியா நிராகரித்தது.

தீர்மானம் அறிமுகம்
இந்நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா நாடாளுமன்ற உறுப்பினர் ஜுவான் வர்காஸ் அறிமுகம் செய்தார்.

தீர்மானத்தில் இருப்பது என்ன?
இதுபற்றி அவர் கூறியதாவது, "பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மறைவுக்கு பிறகு இந்த தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்காக வாதிடும் தனிநபர்களை தவறாக நடத்துவதும் சிறையில் அடைப்பதையும் தடுக்க வேண்டும் என்பதை இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு இந்த தீர்மானம் தெளிவுப்படுத்தும். மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை குறிவைக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் இந்த தீர்மானம் கவலை தெரிவிக்கிறது. தேசத் துரோகச் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இந்த தீர்மானம் பாராட்டுகிறது'' என்றார்.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications