"வாவ்.. சூப்பர்.." பிரதமர் மோடி சொன்ன ஒற்றை வரி.. பாராட்டி தள்ளிய அமெரிக்கா! கவனிக்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாடு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
சர்வதேச அளவில் டாப் 20 பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளே ஜி20 நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஜி20 நாடுகள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறும்.
உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஜி20 மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இந்தாண்டு இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது.

ஜி20 மாநாடு
இந்தோனேசியாவில் பாலி நகரில் நடந்த இந்த ஜி20 நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பல விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உக்ரைன் போர் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த உச்ச மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி வாயிலாகக் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகவே கலந்து கொண்டனர். இந்த ஜி20 கூட்டத்தை அடுத்தாண்டு இந்தியா தலைமையேற்க உள்ளது. "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருப்பொருளில் இந்தியா தலைமை இருக்கும் என்றும் இந்த நூற்றாண்டு போருக்கானது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா பாராட்டு
இதனிடையே ஜி20 விவகாரத்தில் பிரதமர் மோடியையும் இந்தியாவையும் அமெரிக்கா வெகுவாக பாராட்டி உள்ளது. ஜி-20 உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியா முக்கிய பங்காற்றியது என்று வெள்ளை மாளிகை பாராட்டியது. மேலும், இந்த நூற்றாண்டு போரினுடையதாக இருக்கக் கூடாது என்று கூறியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்கா பாராட்டியது.

ரொம்பவே முக்கியம்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், "உச்சி மாநாட்டில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியா இன்றியமையாத பங்கு வகித்தது. இன்றைய நூற்றாண்டு போராக இருக்கக்கூடாது என்பதைப் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். மேலும், இந்த ஜி20 மாநாட்டில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

நல்ல முடிவுகள்
தற்போதைய சூழலில் உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உள்ளோம். அதே நேரம் இங்கு இருக்கும் பல்வேறு சிக்கல்களைக் களையக்கூடிய ஒரு சர்வதேச பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியையும் நாங்கள் தொடர்கிறோம். வரும் நாட்களில் இதில் நல்ல முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவின் பங்கு
இந்த கூட்டத்தில் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. அடுத்தாண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்க உள்ளது. இந்தியாவின் தலைமையை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம். இந்தியாவில் அடுத்து நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இந்த உச்சி மாநாட்டில் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபருடன் அதிபர் பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார்" என்றார்.

சுவாரசியம்
முன்னதாக ஜி20 மாநாடு தொடங்குவதற்கு முன்பு ஒரு சுவாரசிய நிகழ்வு ஒன்று நடந்தது. அதாவது மாநாடு தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேடி வந்தார். நரேந்திர மோடியைத் தேடி வந்த பைடன் அவரிடம் கை கொடுத்து உரையாடினார். இதை பின்னால் இருந்த வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தார்.

ரசித்த மோடி
அப்போது பிரதமர் மோடி அவரிடம் ஏதோ சொல்ல, அதைக் கேட்டு ரசிக்கும் அமெரிக்க அதிபர் பைடன் சிரித்துக் கொண்டே பிரதமர் மோடியைத் தட்டிக் கொடுக்கிறார். அதேபோல மாநாடு முடிந்த பின்னர் கிளம்பும்போதும், பிரதமர் மோடி பைடன் இடையே சுவாரசிய சந்திப்பு ஒன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications