ஆதிஷேசனுக்காக உருவான ஆருத்ரா தரிசனம் கண்டால் சகல சுகமும் கிடைக்கும்..பிறவிப்பிணி நீங்கும்
மதுரை: எம்பெருமான் ஈசன் ஆடும் நடனத்திற்கு ஏற்பவே இப்பூவுலகம் அசைகிறது என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். மார்கழி திருவாதிரை நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தால் சகலவித சுகபோகங்களும் கிடைக்கப்பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணு தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டார் ஆதிஷேசன். அதுபற்றி மஹாவிஷ்ணுவிடம் கேட்க, தாருகாவனத்தில் சிவபெருமான் ஆடிய அற்புத நடனம் பற்றி சொல்ல, ஆதிஷேசனுக்கு தானும் அந்த நடனத்தை பார்க்க ஆவல் ஏற்பட்டது. அதற்காக பாதி உடல் மனிதனாகவும் மீதி உடல் பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் இருந்தார். அவருக்காக சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்படுகிறது.

தில்லையில் நடராஜர் ஆடும் நடனமானது காஸ்மிக் நடனம் என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறுகின்றனர். அணுவை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட அணுவின் அசைவானது நடராஜர் ஆடும் நடனத்தைப் போலவே இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அதை உணர்ந்தோ என்னவோ, திருமந்திரம் அருளிய திருமூலர் கூட அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறியிருக்கிறார்.
பிரபஞ்சம் உருவாக காரணமான ஹிக்ஸ் போசான் என்னும் கடவுளின் துகள் பற்றிய ஆராய்ச்சி நடத்துவதற்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி கடவுள் துகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய விஞ்ஞானிகள் கூட முதலில் பயந்தனர். ஆனால் அப்போது நமது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்கள் தான், கவலைப்பட வேண்டாம். அணுவும் நானே, அண்டமும் நானே என்று நடராஜ பெருமான் அருளியிருக்கிறார். நீங்கள் உங்களுடைய ஆராய்ச்சியை தொடங்குவதற்கு முன்பு, அங்கு ஒரு நடராஜர் சிலையை வைத்து வணங்கிவிட்டு பிறகு உங்கள் ஆராய்ச்சியை தொடங்குங்கள், உங்களுடைய ஆராய்ச்சி எந்தவிதமான தடங்களும் ஆபத்தும் இன்றி வெற்றிகரமாக முடியும் என்று ஆலோசனை வழங்கினார்.
அணு விஞ்ஞானிகளும் அப்துல் கலாமின் ஆலோசனைப்படியே, நடராஜர் சிலையை வைத்து வணங்கி அதன் பின்னர் அணு ஆராய்ச்சியை தொடங்கியதோடு, அதனை வெற்றிகரமாக முடித்தும் விட்டனர். அது தான் கடவுள் துகள் என்று சொல்லப்பட்ட ஹிக்ஸ் போசன் துகள் ஆகும். அந்த அணுவின் சுழற்சியை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அது தில்லையில் ஆடும் நடராஜரின் நடனத்தை ஒத்திருப்பதாக வியந்தனர். இந்துக்களாகிய நாம் அதனை ஆனந்த தாண்டவம் என்று போற்றுகிறோம். இந்த ஆனந்த தாண்டவமே பின்னாளில் ஆருத்ரா தரிசன நிகழ்வாக உருவாகவும் காரண கர்த்தாவாக இருந்தது.
முன்னொரு காலத்தில், வேதங்களை கரைத்து குடித்த முனிவர்களும் ரிஷிகளும் தாருகா வனம் என்ற இடத்தில் வசித்து வந்தனர். அவர்கள் நால்வகை வேதங்களையும் கற்றறிந்ததால் கர்வம் தலைக்கேறியது. கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. கர்ம மார்க்கமே சிறந்தது. அவரவர் செய்த கர்மங்களே பலன்களை அளிப்பதால், உயிர்கள் தாங்களாகவே கர்ம பலன்களை அனுபவிப்பதாலும், ஈசன் என்ற ஒருவர் தேவையில்லாத ஒன்று என்று கர்வம் கொண்டு திரிந்தனர்.

அந்த கர்வத்தினால் எங்களால் தான் அனைத்தும் நடக்கிறது, அப்புறம் ஈசன் எதற்கு என்று அளவுக்கதிகமாக ஆட்டம் போட ஆரம்பித்தனர். முனிவர்களின் கர்வத்தை போக்க எண்ணிய ஈசன், பிட்சாடனர் கோலத்தில் உடன் மஹாவிஷ்ணுவையும் மோகினி வடிவத்தில் அழைத்துக் கொண்டு தாருகா வனத்திற்கு சென்றனர். தாருகா வனத்தில் இருந்த பெண்கள் அனைவரும் பிட்சாடனர் அழகில் மயங்கி அவரை பின் தொடர, பல முனிவர்கள் மோகினியை பின் தொடர்ந்து சென்றனர்.
இதனால் அன்றாடம் நடக்க வேண்டிய யாகம் தடைபட்டது. மிச்சமிருந்த முனிவர்கள் ஒன்று சேர்ந்து நிலைமையை சரிசெய்ய நினைத்தனர். இதற்காக அபிசார வேள்வி ஒன்றை நடத்த ஆரம்பித்தனர். அந்த வேள்வியில் இருந்து முதலில் புலி ஒன்று வெளிப்பட்டது. அதை பிட்சாடனர் மீது ஏவினர். ஆனால் பிட்சாடனர் புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார்.
அடுத்ததாக, வேள்வியிலிருந்து மான், நெருப்பு ஆகியவற்றை அனுப்ப, அவற்றின் வீரியத்தை குறைத்து தன் கைகளில் ஏந்திக் கொண்டார். அடுத்ததாக வேள்வியிலிருந்து வெளிப்பட்ட யானையை அனுப்பினர். பிட்சாடனர் அதைக் கொன்று அதன் தோலை மேலாடையாக போர்த்திக் கொண்டார். இதைக் கண்ட முனிவர்கள் தங்களின் முழு ஞானத்தையும் பயன்படுத்தி வேள்வியில் இருந்து முயலகன் என்ற அரக்கனை உருவாக்கி பிட்சாடனரை அனுப்பி வைத்தனர்.
பிட்சாடனர், முயலகனை பிடித்து தன்னுடைய காலடியில் போட்டு அமுக்கி விட்டார். இதனால், செய்வதறியாது திகைத்த முனிவர்கள் வந்திருப்பது தங்களையும் மீறிய சக்தியான ஈசனே என்பதை அறிந்து கொண்டு, தங்களை மன்னித்தருள வேண்டினர். அப்போது அங்கு வந்த நந்தி தேவர் மத்தளம் வாசிக்க, மோகினி வடிவத்திலிருந்த மஹாவிஷ்ணு புல்லாங்குழல் வாசிக்க, முனிவர்களின் அறியாமையை நீக்க பேருள்ளம் கொண்ட ஈசனும் நடராஜ மூர்த்தியாக ஆனந்த தாண்டவம் ஆடினார். அதைக் கண்ட தாருகா வனத்து முனிவர்களும் புண்ணியம் அடைந்தனர்.
ஒரு நாள் இந்த நிகழ்வை நினைத்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மஹாவிஷ்ணு, தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருக்க, அதைக் கண்ட ஆதிஷேசன் காரணம் கேட்க, மஹாவிஷ்ணுவும் தாருகா வனத்தில் நடந்த நிகழ்வையும், அங்கு ஈசன் நிகழ்த்திய ஆனந்த தாண்டவ நடனத்தைப் பற்றியும் ஆதி ஷேசனுக்கு சொல்ல, அவருக்கும் அந்த அற்புத நடனத்தைக் காண ஆவல் உண்டானது.
ஆதிஷேசனும் உடனடியாக பதஞ்சலி என்ற பெயரில், பாதி மனித உடலாகவும் பாதி பாம்பு உடலாகவும் தோன்றி பூவுலகில் தவம் புரியத் தொடங்கினார். அந்த தவத்தின் பயனாக பதஞ்சலி மகரிஷி முன் தோன்றிய ஈசன், உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண்பதற்காக ஆவல் கொண்டுள்ளான். நீங்கள் இருவரும் இணைந்து தில்லைவனம் என்றழைக்கப்படும் சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் பூர்த்தியாகும் என்றார்.

ஈசன் சொன்னது போல், மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு நன்னாளில், மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை என்ற நட்சத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்பது பொருளாகும். அதுவே பின்னாளில் மருவி ஆருத்ரா என மாறியது.
திருவாதிரை நட்சத்திரம் ருத்ரனின் அம்சமாகும். திருவாதிரை நட்சத்திரத்தன்று ஈசனின் ஆனந்த நடன தரிசனம் கிடைத்ததால் அது ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகிறது. அந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டு ஆருத்ரா தரிசனத்தை கண்டு களித்தால் சகலவித சுகபோகங்களும் கிடைக்கப்பெற்று பிறவிப் பிணி நீங்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications