Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தி.நகரில் அருள்பாலிக்க வரும் திருச்சானூர் பத்மாவதி தாயார்.. ஆலய கும்பாபிஷகம் எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சானூரில் அருள்பாலிக்கும் பத்மாவதி தாயார் சென்னை தியாகராயா நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அருள்பாலிக்க வரப்போகிறார். பத்மாவதி தாயார் ஆலயம் பக்தர்களின் தரிசனத்திற்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம். இக்கோயிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

அதே போல் தமிழகத்தின் தலைநகரான சென்னையின். வர்த்தகப் பகுதியான தியாகராயா நகர், வெங்கட்நாராயணா சாலையிலும் ஒரு வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

சென்னையில் திருப்பதி பெருமாள்

சென்னையில் திருப்பதி பெருமாள்

திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் கூட தி.நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிப்பதுண்டு. திருப்பதியைப் போல் இங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும். விசேஷ நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு. இவரை நினைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

 காஞ்சனா நன்கொடை

காஞ்சனா நன்கொடை

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. 1960-70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருபவர். தற்போது இவருக்கு 84 வயதாகிறது. இவர் திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் இவருடைய உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.

ஏழுமலையானுக்கு நன்கொடை

ஏழுமலையானுக்கு நன்கொடை

உறவினர்கள் ஏமாற்றி அபரித்துக்கொண்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றப் படியேறினார். அப்போது, தான் வழக்கில் ஜெயித்தால் அனைத்து சொத்துக்களையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக்கொண்டது போலவே, வழக்கில் வெற்றி பெற்று இழந்த சொத்துக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். அவர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டது போலவே சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததால், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.

பத்மாவதி தாயருக்கு ஆலயம்

பத்மாவதி தாயருக்கு ஆலயம்

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நடைகொடை பெறப்பட்டது.

கும்பாபிஷேகம் எப்போது

கும்பாபிஷேகம் எப்போது

இதனையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதியன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயிலானது மன்னர்கள் கால முறையில் உருவாக்கப்பட்ட கற்கள் கொண்டு கட்டப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள ஆறு கிரவுண்டு நிலத்தில் மூன்று கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.

பத்மாவதி தாயார் அருள்

பத்மாவதி தாயார் அருள்

தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வரும் 2023 பிப்ரவரி மாதத்தில், பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயிலுக்கு சொந்தமாக புஷ்கரணி, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+