அமீர் ஜெயித்தது அமீரை விட நிரூப்புக்கு தான் சந்தோஷம்... காரணம் இதுவா?? கடுப்பில் ரசிகர்கள்
சென்னை: டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அமீர் ஜெயித்தது நிரூப்க்கு அதிகமான சந்தோஷம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நிரூப்பின் உண்மையான சந்தோஷத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலர் நிரூப்பை கலாய்த்து வருகிறார்கள்.

ஆதரவும், வெறுப்பும் நிரூப்க்கு இருக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் முடிவடைய இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது நிரூப்பின் செயலைப் பார்த்து ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே ஆரம்பத்திலிருந்து இவருக்கு ஒரு பக்கமாக ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில நெட்டிசன்கள் இவர் செய்யும் செயல்களை மீம்ஸ்களில் போட்டு வறுத்து எடுத்து வந்தனர். பிரியங்காவுடன் சண்டையில் இவர் பேசும் வார்த்தைகள் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் கலாய்ப்பதற்கு பலர் தவறவில்லை.

கடுப்பான நிரூப்
டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முதல் டாஸ்க்கிலே இவரை சக போட்டியாளர்கள் வெளியேற்றி விட்டதால் இவர் கடுப்பில் தான் இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அந்த டிக்கெட்டை அவர் பார்த்த விதத்தை பார்க்கும் போதே அவருக்கு அந்த டிக்கெட்டை பெறுவதற்காக எவ்வளவு ஆசைகள் இருந்திருக்கும் என்று தெரிய முடிந்தது. இதனால் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். நன்றாக விளையாடும் போட்டியாளரை இப்படி வெளியேற்றி விட்டார்கள் என்று பலர் இவருக்கு ஆதரவாக பேசிக்கொண்டிரந்தனர்.

தொடரும் கருத்து வேறுபாடுகள்
ஆனால் இந்த விளையாட்டில் யார் ஜெயித்தாலும் பரவாயில்லை சிபி ஜெயித்தால் தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வந்துகொண்டிருந்தார் என்று பலர் கூறி வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து நிரூப்க்கு டப் கொடுக்கும் போட்டியாளராக சிபி இருந்து வருகிறார். ஏற்கனவே ரேங்க் டாஸ்க்கில் சிபி மற்றும் நிரூப்க்கு இடையே சண்டை வாக்குவாதங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இதில் நிரூப்பை சிபி குறை கூறியது நிரூப்பின் மனதில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் சிபிஐ எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று நிரூப் சான்ஸ்காக என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

உண்மை என்ன தெரியுமா
டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் போட்டிகள் 5 கட்டங்களாக நடைபெற்று இறுதியில் அந்த டிக்கெட்டை பெறும் நபர் என அமீர் பெயரை அறிவிக்கப்பட்டது. இதில் அமீரை விட அதிகமாக சந்தோஷம் அடைந்தது நிரூப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் கடைசிவரை போட்டி போட்டு சிபி தோற்றுப் போய்விட்டது. நிரூப்க்கு மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். விளையாட்டு என்றால் போட்டிகளும் இருக்கத்தான் வேண்டும் என்று நிரூப்பின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். சமூகத்தில் தற்போது இந்த ஒரு கருத்துக்காக கருத்து மோதல்கள் வெடித்து வருகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications