Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் இறந்துட்டா என் மகனை பத்திரமா பார்த்துக்கோங்க! 30 வருட ரகசியம்..லாரன்ஸின் அம்மா கண்ணீர் வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர், சமூக சேவகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என்று பல அடையாளங்களைக் கொண்ட ராகவா லாரன்ஸின் அம்மா கண் கலங்க பேட்டி ஒன்றில் பேசிய வார்த்தைகள் குறித்து இணையத்தில் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

ராகவா லாரன்ஸ் பல வருடங்களாகவே தன்னால் முடிந்த அளவிற்கு குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கும் உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். இப்போது விவசாயிகளுக்கும் 10 டிராக்டர் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தன்னிடம் மனு கொடுக்கும் எல்லா தரப்பட்டவர்களுக்கும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்து கொண்டிருக்கும் லாரன்ஸ் மாஸ்டர் அவருடைய அம்மாவோடு சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது லாரன்ஸின் அம்மா கண்கலங்க பேசி இருக்கிறார்.

Actor Lawrence s mother tearful words to take care of my son if I die

அதில் என்னுடைய மகன் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நான் எந்த இடத்திலும் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டது கிடையாது. எனக்கு நாளைக்கு ஏதாவது ஆகி நான் இறந்துட்டா என்னுடைய மகனை நீங்க எல்லாரும் பத்திரமா பாத்துக்கோங்க... லாரன்ஸிற்க்கு என்னை போலவே இங்கு அவருக்கு நிறைய அம்மாமார்கள் இருக்கிறார்கள் எனக்கு தெரியும்.

நான் வெளியே போகும்போது கூட எல்லோரும் உங்க பையன் நல்லா இருக்கணும்னு மனசார சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு இந்த ஒரு சந்தோஷமே போதும். நாங்க லாரன்ஸ் சின்ன பிள்ளையா இருக்கும்போது ஓலை வீட்டில்தான் இருந்தோம். மழையில் வீடு எல்லாம் ஒழுகும்... அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் லாரன்ஸ் வளர்ந்து வந்தான். அதனாலயே இன்னைக்கும் அவன் எங்கே போனாலும் எளிமையாக இருக்கிறார்.

எனக்கு அதுதான் என்னுடைய பிள்ளையிடம் ரொம்ப பிடிச்சிருக்கு. அவன் எந்த இடத்தில் இருக்கும் போதும் மாறவில்லை. நான் எப்போதும் அவனிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான். இது போலவே எல்லோருக்கும் உதவி செய். ஆனால் அரசியலுக்கு மட்டும் வந்து விடாதே அது வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். இப்படியே அவன் சம்பாதிக்கிறது இல்லாதவர்களுக்கு கொடுத்தால் போதும் என்று லாரன்ஸ் மாஸ்டரின் அம்மா கண்கலங்க அந்த பேட்டியில் பேசி இருக்கிறார் .

இதைத்தொடர்ந்து பேசிய லாரன்ஸ் அம்மா இப்படி பேசும்போது எனக்கு மேலும் கஷ்டமாக இருக்கிறது. நான் வெளியே போகும்போது பலர் என்னிடம் காட்டும் அன்பை பார்த்து நான் திகைத்து போயிருக்கிறேன். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை இந்த அன்பு மட்டும் போதும். நான் ஒரு ஊருக்கு போயிருந்த போது ஒரு அம்மா என்னுடைய வாயில் ஒரு பிடி சோறை அள்ளி திணித்தார். அப்போ என்னுடைய வாயில் மட்டுமல்லாமல் முகம் எல்லாம் சோறு ஆகிவிட்டது.

எனக்கு அவங்க சோறு ஊட்டினது மறக்க முடியாது... அதுபோல வெளியே எங்க போனாலும் எங்க வீட்டில சாப்பிடுப்பான்னுட்டு எல்லாரும் உரிமையா பேசுவாங்க. இன்னைக்கு நான் என்னிடம் இருக்கிறதை கொடுக்கிறேன். இதை பார்த்து பலரும் இதுபோல இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய ஆசை என்று ராகவா லாரன்ஸ் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+