அது போனால் என்ன..?? புது சந்தோஷம் வந்து விட்டது.. ரட்சிதா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி
சென்னை: நடிகை ரட்சிதா மகாலட்சுமி நடித்து வந்த சொல்ல மறந்த கதை சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டதும் அதனுடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் தற்போது ரட்சிதா மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.
ரட்சிதா மகாலட்சுமி கடந்த இரண்டு நாட்களாக தன்னுடைய கோபங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டு வந்த நிலையில் தற்போது தன்னுடைய புது பயணத்தை குறித்து பதிவினை வெளியிட்டுள்ளார்.
தான் புதியதாக வெப் சீரியல் ஒன்றில் கமிட்டாகி இருக்கும் செய்தியை தன்னுடைய ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு ரட்சிதா கூறியுள்ளார்.

மறக்கமுடியாத மீனாட்சி
சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீனாட்சியாக நீங்கா இடம் பிடித்த ரச்சிதா.. பல இளைஞர்களின் சின்னத்திரை கனவு நாயகியாக வலம் வந்தார். சேலை, தாவணி காஸ்ட்யூம்கள் இவருக்கு என்றே கண்டுபிடித்தது போல் அவ்வளவு அம்சமாக இவருக்கு பொருந்தி இருக்கும். சீரியல்களில் குடும்பப் பெண், கிராமத்துப் பெண் போன்ற கேரக்டர்களுக்கு இவர் போல் இருக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சுட்டிக்காட்டும் அளவிற்கு நேச்சுரல் பியூட்டி ஆக சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

எப்போவுமே மீனாட்சி இவர்தான்
விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரே சீரியல் பல சீசன்களில் வந்து கதாநாயகி ஒருவரே தொடர்ந்து கொண்டிருந்தது சரவணன் மீனாட்சி சீரியல் ஆகத்தான் இருக்க முடியும். இந்த சீரியலில் மீனாட்சி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர்இ தற்போது மீண்டும் அதே விஜய் டிவியில் மகாவாகவே வாழ்ந்து வருகிறார். சரவணன் மீனாட்சி சீரியலை போல நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கலகலப்பாக இருந்தாலும் இந்த சீரியலில் இவருக்கு அதிகமாக முக்கியத்துவம் தரப்படவில்லை என்று ரசிகர்கள் கொஞ்சம் பீல் பண்ணி வந்ததனராம்.

சேனல் மீது கோபம்
பல எதிர்ப்புகளுக்கு பிறகு பல பேர் அறிவுரை சொன்னாலும் கேட்டுக் கொள்ளாமலும் ரட்சிதா சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் நடித்து வந்ததாராம்.ஆனால் அந்த சீரியல் ஒளிபரப்பான சேனல் அந்த சீரியலை திடீரென்று முடித்து விட்டதால் தனக்கு கிடைத்த ஏமாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்த சேனலை குறித்து ரட்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்து தன்னுடைய கோபங்களை வெளிக்காட்டி இருந்தார் . ரட்சிதாவின் இந்த திடீர் வருத்தத்தை பார்த்த அவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

புது சீரியல் தொடக்கம்
ரட்சிதா தற்போது நடிக்கும் சீரியல் எல்லாமே இப்படி அவருக்கு செட் ஆகாமல் போய் இருக்கிறதே என்று அவருடைய ரசிகர்களும் வருத்தத்தில் சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் ரட்சிதா தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக தான் புதிய வெப் சீரியல் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதை குறித்து கூறியிருக்கிறார். அவர் எந்த சீரியலில் நடிக்கிறார் என்று செய்திகள் ரசிகர்களுக்கு தெரியாவிட்டாலும் புதிய சீரியலில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கி விட்டார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications