ரட்சிதா விலகிய சேனலில் கெத்தாக களமிறங்கும் தினேஷ்.. காரணம் அது தானா..!!??
சென்னை: சின்னத்திரை தம்பதிகள் ஆன ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் தற்போது விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் ரட்சிதா விலகிய அதே சேனலில் தினேஷ் மீண்டும் சீரியலில் நடிக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகத்தான் இவர்கள் இருவரும் இப்படி செய்கிறார்களா?? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

முதல் சீரியலில் காதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான ரட்சிதா, அதே சீரியலில் அவருடன் இணைந்து நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சீரியலில் கருப்பு தேவதையாக ரட்சிதா நடித்திருப்பார். ஆனால் தினேஷ் இவரை காதலிக்காமல் சீரியலின் கதாநாயகி கல்யாணியை காதலிப்பார். ஆனால் தினேஷை ஒருதலையாக ரட்சிதா காதலித்திருப்பார். இவர்களின் காதல் முதல் சீரியலில் கல்யாணத்தில் முடிந்திருந்தது.

பல சீசன்களில் மீனாட்சி
திருமணத்திற்குப் பிறகு ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரட்சிதாவுக்கு ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. தற்போது வரைக்கும் இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை என்றாலும் தங்களுடைய துறையில் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் பல சீசன்களில் மீனாட்சி ஆக ரட்சிதா நடித்து வந்தார்.

கருத்து வேறுபாடு காரணமா
அதுபோல தினேஷ் கார்த்திக், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஜீ தமிழில் நாச்சியார் புறம் என்னும் சீரியலில் தினேஷ் மற்றும் ரட்சிதா இருவரும் ஜோடியாக நடித்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த சீரியல் திடீரென்று முடித்து வைக்கப்பட்டது. இதற்கு பிறகு இவர்கள் மீண்டும் சீரியலில் ஒன்றாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் இவர்கள் இருவரும் மன கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதைக் குறித்து இவர்கள் இருவரும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

மீண்டும் களம் இறங்கிய தினேஷ்
விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரட்சிதா நடித்து வந்தார். ஆனால், திடீரென்று இந்த சீரியலை விட்டு விலகி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வந்தார். தற்போது இந்த சீரியலும் ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட்டு விட்டது. இதை குறித்து காட்டமான தன்னுடைய வருத்தத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரட்சிதா தெரிவித்து இருந்தார். ஆனால் தினேஷ் சமீப காலத்தில் எந்த சீரியல் களிலும் நடிக்காமல் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தற்போது அறிமுகம் ஆகி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியை விட்டு ரட்சிதா சென்று விட்ட நிலையில் மீண்டும் விஜய் டிவிக்கு தினேஷ் வந்து இருப்பதால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்பது உண்மைதானோ!!?? என்று குழப்பமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications