நெகட்டிவ் கருத்துக்களை எப்படி கையாளுவீர்கள்..?நச்சென்று பதில் கூறிய பாவனி.. வேற லெவல் அனுபவம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிக்குப் பிறகு பவானி ரெட்டி தன்னுடைய ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறுகிறார்.
தனக்கு வரும் நெகட்டிவ் கருத்துக்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு பாவனியின் பதில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

சீரியலில் நாயகி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலமாக சின்னத் திரை ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே பிசி ஆகவும் ஆக்டிவாகவும் இருக்கும் பாவனிக்கு இளைஞர்கள் பட்டாளம் ரசிகர்களாக இருந்து வருகிறது. குடும்ப பெண்களை சீரியல்கள் மூலமாக தன் வசப்படுத்திய பாவனி, சமூக வலைத்தளத்தில் போட்டோ சூட் மூலமாக ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

வழக்கமான நெகட்டிவ் கருத்துக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் பாவனியை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாத ரசிகர்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய சோக கதையை கேட்டு அவருக்கு அதிகமான ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர்.ஒரு சில ரசிகர்கள் பாவனியின் நடவடிக்கைகள் நடிப்பு என்றும் அவரைப்பற்றி சமூகவலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகிறார். ஆரம்பத்திலிருந்தே பாவனி அவருடைய திருமண வாழ்க்கையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அதிகமாக நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருந்ததாம். அது மட்டுமல்லாமல் தற்போது கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல செயல்கள் நடந்ததும் பாவனிக்கு எதிராக நெகட்டிவ் கருத்துக்களை தோன்ற வைத்துள்ளது.

பாவனியின் அசத்தல் பதில்
பாவனி பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதை தற்போது கூட அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா மற்றும் ஒருசில போட்டியாளர்கள் பாவனி என்ன விளையாட்டு விளையாடி விட்டார்?? எதனால் அவருக்கு மூன்றாவது இடம் வரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது..?? என்று பாவனியைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தனர். இந்த மாதிரி குறை கூறுபவர்களை பற்றியும் நெகட்டிவ் கருத்துக்களையும் எப்படி நீங்கள் சமாளிக்கிறீர்கள் என்று ஒரு ரசிகை கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பாவனி அதை எல்லாம் இக்நோர் பண்ணிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பாவனியின் சூப்பர் பாலிசி
பாவனி சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தாலும் தனக்கு வரும் பாசிட்டிவ் கமெண்டுகளுக்கு மட்டும்தான் செவி சாய்க்கிறார். நெகட்டிவ் கருத்துக்களை பற்றி கண்டு கொள்வதே இல்லையாம். நாம் என்ன செய்தாலும் அதில் குறை கூறுவதற்கு என்று ஒரு சிலர் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருந்தால் நமக்கு நல்லது நினைக்கும், சொல்லும் நபர்களை நாம் மறந்து விடுவோம். அதனால் நெகட்டிவ் கருத்துக்களை கூறுபவர்களை கண்டு கொள்வதே கிடையாது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாவனி யூடியூப் பக்கமே செல்லவே மாட்டாராம். போட்டோ ஷூட் நடத்தி அதை போஸ்ட் போடுவதோடு சரி அதற்கு வரும் கமெண்டுகளை பல முறை தான் படிப்பதே இல்லை என்று கூறியிருக்கிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications