Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன நடந்தாலும் அன்றாட வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும்... நேரடியாக நாமினேஷனுக்கு செல்லும் நபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்க்கில் விதிமீறும் போட்டியாளர்கள் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்று பிக்பாஸ் பயங்கரமான திட்டத்தை தீட்டி இருக்கிறது.

டேய் சும்மா இருடா...என்று டாஸ்கிற்க்கு புது பெயர் வைத்திருக்கிறது பிக்பாஸ்.

என்ன நடந்தாலும் வேலையில் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு டாஸ்க் வைத்து போட்டியாளர்களை வைத்து செய்ய தொடங்கிவிட்டதா??பிக்பாஸ் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புதுமாதிரி தலைப்பு

புதுமாதிரி தலைப்பு

பிக்பாஸ் போட்டியில் ஒவ்வொரு டாஸ்க்கும் வித்தியாசமாக தலைப்புகளில் வைத்து போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்களுக்கும் சில நேரங்களில் என்டர்டைமெண்ட் கொடுத்துவிடுகிறது. பல நேரங்களில் மொக்கையாகவும் செய்துவிடுகிறது. அது போலத்தான் தற்போதைய டாஸ்க் கூட வித்தியாசமான தலைப்புகளில் அமல்படுத்த பிக்பாஸ் நினைத்து இருக்கிறது. ஆனாலும் அதிலும் எந்த மாதிரி பிரச்சனை வருமோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்

பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டா??

பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டா??

பிக்பாஸ் டாஸ்க் என்றாலே அதில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளர் போர் கொடியை தூக்கி கொண்டு இருக்கிறார். சில நேரங்களில் அவர்கள் தெரிந்து செய்கிறார்களா??அல்லது தெரியாமல் இப்படி செய்கிறார்களா??என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இன்று போட்டி போட்டு சண்டை போடும் போட்டியாளர்கள் அடுத்த நாளே சமாதானம் ஆகி விடுகின்றனர். அதனால் இதில் ஸ்கிரிப்ட் தானா என்று பலருக்கும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் இவர்களுடைய ஆக்ரோஷத்தை பார்த்து இது உண்மைதான் என்று நம்பவும் தோன்றுகிறது.

டேய் சும்மா இருங்கடா டாஸ்க்

டேய் சும்மா இருங்கடா டாஸ்க்

நேற்றைய கனா காணும் காலங்கள் டாஸ்கில் ஸ்கூல் லைஃபை கொண்டுவந்த பிக் பாஸ் இன்று வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்தும் வகையில் டேய் சும்மா இருங்கடா...என்று தலைப்பிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தாலும் தனது அன்றாட வேலையில் கவனமாக செய்து கொண்டிருக்கவேண்டும் அதில் கவனத்தை சிதற விட்டால் அவர்கள் நேரடியாக நாமினேஷன் செய்ய தகுதியை உடையவர்களாக மாறி விடுகிறார்கள் என்று பிக்பாஸ் விதியை அண்ணாச்சி உரக்கப் படித்துக் கொண்டிருக்கிறார்.

Recommended Video

    Bigg Boss நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுகிறார் AKSHARA? | Ciby, Raju
    டாஸ்க்கை மறந்த பிரியங்கா

    டாஸ்க்கை மறந்த பிரியங்கா

    அண்ணாச்சி படித்து முடித்ததும் போட்டியாளர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை தொடங்கி விட்டார்கள். அதுவும் ராஜூ தனக்கே உரிய அந்த நையாண்டி தனத்தோடு பேசி கொண்டிருக்கிறார். என்னதான் இவர்கள் தங்களுடைய வேலையில் கவனமாக இருந்தாலும் அடுத்த பக்கத்தில் பிக்பாஸ் பணியாளர்கள் உள்ளே கேக் கொண்டு வைத்து ஒரு சில வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக பிக்பாஸ் கதவு திறந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்ததும் டாஸ்கை மறந்து பிரியங்கா யாரோ வருகிறார்கள் என்று கத்திக் கொண்டு ஓடுகிறார். இதை பார்த்து சக போட்டியாளர்கள் அவருக்கு அலாட் கொடுத்தாலும் அவர் கண்டுகொள்ளவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+