Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்த பூர்ணிமா நாளில் மகனின் பெயர்...சூப்பர் போட்டோ சூட் நடத்திய நீலிமா ராணி

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மகனின் பெயரை அறிவித்துள்ளார் நீலிமா ராணி. திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நீலிமா. குட்டிக்குழந்தையுடன் குடும்பத்தோடு போட்டோ சூட் நடத்தி புத்த பூர்ணிமா நாளில் தனது மகனின் பெயரை அறிவித்துள்ளார்.

சின்னத்திரையில் 2000ம் ஆண்டுகளில் ராணியாக வலம் வந்தவர் நீலிமா ராணி. இவர் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இதற்கிடையில் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தார்.

வாணி ராணி

வாணி ராணி

நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய இளமையை மெயின்டெயின் செய்து வருகிறார். சினிமாவில் நடிக்க போன பின்னர் சீரியலுக்கு பிரேக் விட்ட நீலிமா ராணி மீண்டும் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

ரசிகர்கள் அதிகம்

ரசிகர்கள் அதிகம்

வில்லியாகவும் காதலியாகவும் மனைவியாகவும் தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றிருந்தாலும் சினிமாவில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார். சீரியல்கள், திரைப்படங்கள் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர் தற்போது, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இரண்டாவது குழந்தை

இரண்டாவது குழந்தை

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.சினிமா, சீரியலுக்கு திடீரென பிரேக் எடுத்த அவர் இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். ஜனவரியில் நாங்கள் நான்கு நபர்களாக ஆக போகிறோம். இன்னும் 20 வாரங்கள் தான் உள்ளது... எங்களுக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

கலக்கல் போட்டோ சூட்

கலக்கல் போட்டோ சூட்

கர்ப்பிணியாக இருக்கும் போது விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நீலிமா தாமரைமேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் இருந்தார். இதை பார்த்து பலரும் நீலிமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீலிமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நீலிமா. மகனின் முகத்தை வெளியே காட்டாத நீலிமா சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தோடு ராமேஸ்வரம் சென்றிருந்த புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முதன் முதலாக குடும்பத்தோடு ஆன்மீக பயணம் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

இளவரசனின் பெயர்

இளவரசனின் பெயர்

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு தனது மகனின் பெயரை அறிவித்துள்ளார் நீலிமா. தனது மகனுக்கு அத்வைத்தா என்று பெயர் வைத்துள்ளார். மேலும், தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். எங்கள் இளவரசனின் பெயர் அத்வைதா இசை என்று இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நீலிமா ராணி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+