நடிக்கச் சொன்னால் கேரக்டராகவே மாறி விட்ட சிபி...எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காத கெத்து
சென்னை: டாஸ்க் என்று வந்தால் நமக்கு அத்துப்படி என்று சிபி தற்போது நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
போட்டிகளில் எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் தன்னுடைய நிலையிலிருந்து மாறவில்லை என ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
மாநாடு டிவி ரைட்ஸ் ரூ.12 கோடி - ரூ.6 கோடியான கதை! சன் டிவி - கலைஞர் டிவி மேட்ச் பிக்சிங்?
அப்படியே ஒரு ஸிட்டான வார்டனை கண் முன்னாடி காட்டிவிட்டார் சிபி என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிரவைத்த அக்ஷராவின் நடவடிக்கை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பிரச்சனைகளை பூகம்பமாக வெடித்து வருகிறது. அதேபோலத்தான் தற்போது நடந்து வரும் கனா காணும் காலங்கள் டாஸ்கில் நேற்றைய எபிசோட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அக்ஷராவின் நடவடிக்கை அமைந்துவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அதற்கு காரணம் சிபி தான் என்று அக்ஷராவின் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும்போது ,சிபி தன்னுடைய கேரக்டரை செய்து கொண்டிருந்தார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சிபியின் சிறப்பான கேரக்டர்
சிபிக்கானா கேரக்டர் இந்த பிக்பாஸ் ஸ்கூலை ஸிட்டான வார்டனாக கண்காணிக்க வேண்டும் என்பதுதான். ஸ்கூலில் படிக்கும் மாணவர்களை ஒழுக்கமாகவும் பெற்றோர் இடத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது தான். அவருடைய கேரக்டருக்கு அதை எந்த ஒரு நிலையிலும் அவர் இறக்காமல் நேர்மையாக விளையாடிக் கொண்டிருந்தார் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் அறிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் கருத்து
தனக்கான கேரக்டரை சரியாக செய்ய வேண்டும் என்று அனைத்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கண்டிப்புடனும் இவர் நடந்து கொண்டது பார்த்து பல ரசிகர்கள் அப்படியே ஒரு ஸிட்டான வார்டனை கண் முன்னாடி கொண்டு வந்துவிட்டார் என்று கூறிவருகின்றனர். இன்னும் ஒரு சிலர் சிபிஐ நடிக்கச் சொன்னால் அப்படியே கேரக்டராக மாறிவிட்டார். இவருக்கு சினிமாக்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று ஜோசியத்தை கூற ஆரம்பித்து விட்டார்கள். எப்படியோ நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு சிலர் இவருக்கு ஆதரவாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
எந்த சூழ்நிலையிலும் மாறாத கேரக்டர்
அக்ஷரா கோபத்தில் வாய்க்கு வந்தபடி இவரை எவ்வளவோ திட்டிக்கொண்டு இருந்தாலும் அந்த நேரத்திலும் தன்னுடைய கெத்தான நடையையும், குணத்தையும் மாற்றிக் கொள்ளாமல் தனக்கே உரிய கம்பீரமான கேரக்டரோடு நடந்துகொண்டார். இவரும் பதிலுக்கு அக்ஷராவோடும் கோபப்பட்டு எந்த வார்த்தைகளயும் விடவில்லை. இதனால் ரசிகர்களின் மத்தியில் இவர் நல்ல மதிப்பை பெற்றுவிட்டார் என்று பலர் கூறி வருகின்றனர். டாஸ்க் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அதில் இவ்வளவு முனைப்போடு விளையாடினால் தான் பார்ப்பவர்களுக்கு நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.