கண்கலங்கி கதறி அழுத சஞ்சீவ்... உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள்
சென்னை: போல்டான கேரக்டரில் இருக்கும் சஞ்சீவ் தற்போது கதறி அழுததை பார்த்து ரசிகர்கள் உருகிப் போய் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சஞ்சீவ் செயலால் ராஜுவை பாராட்டும் ரசிகர்கள் அதிகரிக்கின்றனர்.
பிக்பாஸில் புது கூட்டணி தொடங்கப் போகிறது என ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.

அண்ணாச்சி இடத்தில் சஞ்சீவ்
பிக்பாஸ் ஐந்தாவது சீஸனில் ஒரு போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமாகி இருக்கும் சஞ்சீவ் இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார். அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், தற்போது அதே சஞ்சீவ் அண்ணாச்சியின் இடத்தில் மாறியுள்ளதை பார்த்து பலர் கலாய்க்கவும் தவறவில்லை. முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் அண்ணாச்சியின் பெட்டில் நான் இருந்து கொள்கிறேன் என்று பெருந்தன்மையாக கூறிய சஞ்சீவ், தற்போது அண்ணாச்சியை போன்று அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பிக்பாஸ் வீட்டிற்குள் 50 நாட்களை கடந்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து இருக்கும் சஞ்சீவ் ஆரம்பத்திலிருந்து கலந்திருந்தால் இவர்தான் அடுத்த ஆரியாக இருந்திருப்பார் என்று ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். எப்போதும் தன்னுடைய நேர்மையான கருத்துக்களை சரியான இடத்தில் கூறிவிடுவது இவருடைய கேரக்டராக இருந்து வருவதால் இவரை ரசிகர்கள் நன்றாக ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் குறைந்துவிடும் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

நேர்மையான விளையாட்டு
சஞ்சீவ் சின்னத்திரை வெள்ளித்திரை என சினிமாக்களில் மூலமாக ரசிகர்களுக்கு நன்றாக பரிச்சயமானவர் தான். அதனால்தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்று சொன்னதும் அவருடைய ரசிகர்களுக்கு மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவரும் நன்றாக பூர்த்தி செய்து வருகிறார். இவருடைய விளையாட்டு நேர்மையாக இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இவர் தாமரையை குறை கூறி வருகிறார் என்றும் பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

காரணம் இதுதானா
இந்த வார எலிமினேஷனில் ஒரு போட்டியாளராக இருக்கும் சஞ்சீவ் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளார். அதுவும் அவருடைய மகளின் ஆசைக்காக அவர் வீட்டிற்குள்ளே வந்து வீட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். அதை தற்போது ராஜு இவருக்காகவே விளையாடி இவரை ஜெயிக்க வைத்து விட்டதால் கண்கலங்கி கட்டிபிடித்துள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அண்ணாச்சியின் இடத்தில் இனி சஞ்சீவ், ராஜூவுக்கு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்களின் கூட்டணியால் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூடுகிறது என்றும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications