இவ்வளவு நாளா அப்படி பேசிக்கிட்டு..இப்போ இப்படி பண்ணலாமா?பாக்கியலட்சுமி சீரியலை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தற்போதைய எபிசோடை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ஒரு சில நாட்களாகவே கோபி, ராதிகா திருமண மண்டபத்தில் பாக்யா மற்றும் அவருடைய மாமனார் இவர்களை மட்டுமே சீரியலில் காட்டி வருவதால் பலர் காண்டாகி இருக்கிறார்களாம்.
ஆரம்பத்தில் இருந்தே பாக்கியலட்சுமி என்ன செய்தாலும் அவருக்கு சப்போர்ட் கொடுத்த அவருடைய மகன் எழில் எங்கே என்று பலர் தேடி வருகிறார்கள்.

முரண்பட்ட கருத்துக்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி ராதிகாவின் திருமணம் நடைபெறுமா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்போடு இருந்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் இதைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. பலர் திருமணம் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர் கோபிக்கு ஏற்கனவே குழந்தைகள் திருமணம் முடிந்த நிலையில் இருப்பதால் இனி அவர் திருமணம் செய்தால் இந்த சீரியலை பார்க்கும் சமூகத்தில் பலருக்கும் இதே போல முடிவெடுக்கலாம் என்று ஒரு தப்பான முன் உதாரணமாக ஆகிவிடும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தொடரும் விவாதங்கள்
பாக்கியலட்சுமிக்கு ஆரம்பத்தில் இருந்தே அவருடைய மகன் எழில்தான் பலவகையில் மோட்டிவேஷன் கொடுத்து வந்தார். மாமனார் ஒரு பக்கம் இவருக்கு மோட்டிவேஷன் கொடுத்தாலும் எழில் தன்னுடைய அம்மாவின் பக்கத்தில் நின்று பல நேரங்களில் உதவி செய்திருக்கிறார். ஆனால் தற்போது தன்னுடைய தந்தையின் திருமண நேரத்தில் இவர் எங்கே சென்றார்? இவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லையே? என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். கோபியின் திருமணத்திற்கு பாக்கியாவே சமையல் செய்ய வந்து இருக்கும் நிலையில் பாக்கியாவிற்க்கும் கோபிக்கும் இடையில் தற்போது காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

கலாய்க்கும் ரசிகர்கள்
கோபியின் திருமணத்தை எப்படியும் நிறுத்தி விடுவேன் என்று அவருடைய தந்தை மண்டபத்திற்கு வந்திருந்த நிலையில் கோபி அவரையும் திட்டி வெளியே அனுப்பி விட்டார். இந்த நிலையில் யார் இவருடைய திருமணத்தை நிறுத்துவார்கள் என்று பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் தான் எப்போதும் கோபியிடம் அம்மாவிற்காக சண்டை போடும் எழில் எங்கே போனார்? இந்த நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாக்யாவை ஒவ்வொரு விஷயத்திலும் மோட்டிவேஷன் கொடுக்கிறேன் என்கிற பெயரில் திரி மூட்டி விட்டு விட்டு இப்போ பக்கத்தில் இல்லாமல் போய்விட்டாரே? என்று எழிலை கண்டமேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.

இப்படி பண்ணலாமா
கோபி ராதிகா திருமணம் எபிசோடு இரண்டு வாரங்களாக இழுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருமணம் எப்படியும் நடந்துவிடும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலில் எழிலின் தீவிரமான ரசிகர்கள் கடைசி நேரத்தில் வந்து எப்படியும் எழில் திருமணத்தை நிறுத்தி விடுவார் என்று இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்பாராத பல ட்விஸ்ட்கள் கடைசி நேரத்தில் தான் திறக்கப்படும் என்பது சீரியலின் சுவாரசியத்துக்காக இருந்தாலும் பல வாரங்களாக ஒரே கதையை இழுத்துக் கொண்டு இருந்தால் எப்படி என்று சீரியல் ரசிகர்கள் அழுத்து கொள்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications