"நீ அழகா இருக்கே.. எனக்கு ஆசையா இருக்கு".. பூரித்து போன பூர்ணா.. மேலும் 2 பேர் கைது!
நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பலில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை: "நீ ரொம்ப அழகா இருக்கே.. கல்யாணம் செய்ய ஆசையா இருக்கு" என்று அந்த கேடி ஆசாமி சொன்னதுமே பூர்ணா பூரித்து போய்விட்டார்.. மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று இறுதியில்தான் நடிகை பூர்ணாவுக்கு தெரியவந்தது.. 10 லட்சம் ரூபாய் நகை, பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த அந்த கும்பலில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது லாக்டவுன் சமயம் என்பதால் வீட்டிலேயே முடங்கி கிடந்த நடிகை பூர்ணா, டிக்டாக் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார்... ஷம்னா காசிம் என்பதுதான் இவரது டிக்டாக் அக்கவுண்ட் பெயர்.. இந்த சமயத்தில்தான் பூர்ணாவுக்கு ஒருவர் டிக்டாக்கில் பழக்கமாகி உள்ளார்.. அவர் பெயர் அன்வர்.

துபாயில், கோழிக்காட்டில் நகை கடை வைத்திருப்பதாக சொல்லி உள்ளார்.. கல்யாணம் செய்ய ஆசையாக உள்ளது என்று சொல்லவும், இதை கேட்டு பூரித்துவிட்டார் பூர்ணா, வீட்டில் வந்து முறைப்படி பெண் கேட்க சொல்லி, அதன்படியே அன்வர் 6 பேரை அழைத்து கொண்டு பூர்ணா வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் அவர்கள் அனைவருமே டுபாக்கூர் என பூர்ணாவுக்கு தெரியவந்தது.
ஆனால் அந்த கும்பல் பூர்ணாவிடம் 10 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டல் விடுத்தது.. கடைசியில் பூர்ணாவின் அம்மா போலீசுக்கு போனார்.. அந்த புகாரின்பேரில், அந்த மோசடி கும்பலில் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்... ரபீக், ரமேஷ் கண்ணன், சிவதாசன், அஷ்ரப் என்பது அவர்களின் பெயர்கள்.. இவர்கள் எல்லாருமே திருச்சூரை சேர்ந்தவர்கள்.. தொடர் விசாரணையும் நடந்தது. அப்போதுதான் இந்த கும்பல் மிகப்பெரிய நெட் ஒர்க் என தெரியவந்தது.
கேரள கடத்தல் பெண் ஸ்வப்னாவுக்கும் இவர்களுக்கும்கூட தொடர்பு இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து கல்யாண மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றது தொடர்பாக இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
அவர்களிடம் விசாரணையின்போது, பல பகீர் தகவல்களும் வெளியாகின.. மாடல் அழகிகள், டிவி சீரியல் நடிகைகள் உட்பட பல பெண்களுக்கு, சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி, நம்ப வைத்து ஏமாற்றி, அவர்களிடம் பணம், நகையை அந்த கும்பல் பறித்து வந்ததும் தெரியவந்தது.
அது மட்டுமல்ல, பாலக்காட்டிலுள்ள ஒரு ஹோட்டல் ரூமில் இத்ந பெண்களை அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.. இந்தநிலையில்தான், இதே வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் ஆவர்.. பெயர் நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் என்பதாகும்.. தற்போது அவர்கள் கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இன்னும் விசாரணை நடந்து வருகிறது.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications