பாட்டை ரீமிக்ஸ் செய்து ஒரிஜினலை சிதைப்பது தவறு! காப்பிரைட் விவகாரம் ஏன் பேசப்படுகிறது?

Subscribe to Oneindia Tamil

இன்றைய சமூக வலைதளங்களில், ஒரு திரைப்படத்தின் முழுமையான உரிமை தயாரிப்பாளருக்கு தான் என்பதை வலியுறுத்தும் கருத்துகள் பெருகி வருகின்றன. ஆனால் இக்கருத்து மிகவும் ஒருபக்கமானதாகவும், படைப்பாளிகளின் உரிமைகளை மிதிக்கக் கூடியதுமானதாகவும் இருக்கிறது. ஒரு திரைப்படம் என்பது ஒட்டுமொத்தமாக பல படைப்பாளிகளின் சிறப்பானச் சிந்தனைகளின் கூட்டுச் சேர்க்கையே ஆகும். அதில் கதாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா என பலரின் பங்களிப்பு இருக்கிறது.

ஒரு கதையை வேறு மொழியில் ரீமேக் செய்ய வேண்டுமென்றால், அவ்வகை உரிமை அதற்குரிய கதாசிரியரிடம் இருந்து பெறப்பட வேண்டும். ஒரு திரைப்பட தயாரிப்பாளர் தயாரிப்பு உரிமையை வைத்திருப்பது சரி, ஆனால் அதில் உள்ள கதையின் எழுத்து உரிமை (copyright) என்பது எழுதியவருக்கே சொந்தமானது.

television cinema entertainment

சில நேரங்களில் தயாரிப்பாளர், எழுத்தாளரிடம் இருந்து முழுமையான உரிமையை வாங்கி வைத்திருப்பதும் உண்டு. ஆனால் பெரும்பாலும், எழுத்தாளர் அனுமதிக்காமல் அந்த கதையை ரீமேக் செய்வது சட்டரீதியாகவும், நீதிமன்றங்களின் பார்வையில் தவறான செயலாகவே கருதப்படும்.

இதேபோல், இசையின் உரிமைக்கும் இசையமைப்பாளரின் அனுமதி அவசியம். ஒரு பாட்டை புதிய திரைப்படத்தில் பயன்படுத்தும் முன் அந்த இசையின் மெலடிக்கோ, ஒலி அமைப்புக்களுக்கோ உரிமை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

television cinema entertainment

சில நேரங்களில் பழைய பாடல்களை "remix" செய்வது என்ற பெயரில் அந்த இசையை சிதைத்து, கூடுதலாக புதிய இசையை சேர்த்து வெளியிடுவது நடக்கிறது. இது ஒருவகையில் அசல் இசையமைப்பாளரின் சிந்தனையை அபகரிப்பதற்கே சமமாகும்.

இவை எல்லாம் படைப்பாளி என்ற நிலைமையில் இருப்பவர் சந்திக்க வேண்டிய மிக மோசமான அனுபவங்கள். அவரது உழைப்பையும், அவரது கற்பனைச் செல்வத்தையும் மதிக்காமல், வெறும் வணிக நோக்கத்தில் தயாரிப்பாளர் தனது "ownership" உரிமையை தவறாக பயன்படுத்துவதைப் போல தோன்றுகிறது. இது ஒரு தனி நபரின் கலைப் பயணத்தை நசுக்கும் செயல்.

இந்நிலையில், நாம் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் உள்ளன. கதை, இசை, வசனம், ஒளிப்பதிவு போன்றவற்றுக்கு உரிமை கொண்டவர்களின் அனுமதி தவறாமல் பெறப்பட வேண்டும். இவ்வாறு செய்யப்பட்டால் தான் அந்த படைப்பாளியின் கருத்து, கலை, வியூகம் எல்லாம் மதிக்கப்படும். இல்லையெனில், ஒரு காலத்தில் உணர்வுகளுடன் படைக்கப்பட்ட ஒரு சிறந்த படைப்பு, பிறகு பிறகு வணிக நோக்கத்தில் மட்டுமே கணிக்கப்படும் அளவுக்கு வீழ்ச்சி அடையும்.

television cinema entertainment

இதை மாற்ற, படைப்பாளிகளுக்கு உரிமை கொடுக்கும் சட்டங்கள் மட்டுமல்ல, சமூக விழிப்பும் தேவை. ஒரு கலைஞரின் உரிமையை மதிப்பது, அவரின் உள்ளத்தை மதிப்பதற்கே சமம். அதை நாம் அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அன்றைய காலத்தில் இசையமைப்பாளருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மிகச் சொற்பம். அவர்கள் படைக்கும் இசை, திரைப்படத்திற்கு உயிரோட்டமாக இருந்தபோதும், அந்த பணத்திற்கு ஏற்ற மதிப்பீடு அவர்களுக்கு கிடைக்கவில்லை. இன்று அந்த பழைய இசையைப் பயன்படுத்தி, திருப்பிச் நவீன பாணியில் "ரீமிக்ஸ்" செய்து, கோடிக்கணக்கான லாபம் பார்த்து செல்கின்றனர்.

television cinema entertainment

இத்தகைய மனநிலையை கொண்டவர்களைத் தடுத்து நிறுத்த, ஆரம்பத்திலேயே சட்ட விதிகளின் படி கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். ஒருவரின் கலைப்பணியை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது நாகரிக திருட்டு தான். இது தொடரக் கூடாது என்றால், சட்டமும், சமூக ஒழுக்கமும் இணைந்து செயல்பட வேண்டும்.

இசை எனும் கலைத் துறையில் நேர்மையைக் காக்க நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில், உணர்வுகளால் உருவான கலை, வணிக ஆசையின் கீழ் ஒளிந்து போகும் அபாயம் நம்மை சுற்றி நிற்கிறது.

- குரு கிருஷ்ணன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+