தாமரைக்கு பக்குவமாய் அறிவு சொன்ன ராஜூ...சுருங்கிப் போச்சு தாமரையின் முகம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரைக்கு பக்குவமாய் அறிவுரை கூறியிருக்கிறார் ராஜு.
ரசிகர்களின் மனதில் இருப்பதை அப்படியே ராஜூ கூறியதும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
படபட பேச்சால் சில நேரங்களில் தாமரை செய்யும் செயல் ரசிகர்களை எரிச்சலடைய செய்து விடுகிறது என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆரம்பத்தில் அப்படி இருந்த தாமரை
தாமரையின் செயல் சக போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வெறுக்க வைத்து விடும் என்பதை கருதி அவருக்கு ராஜூ அறிவுரை கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த தாமரைச்செல்வி இந்த வீட்டை விட்டு நான் போகமாட்டேன் என்றும் என்னை அனுப்பி வைத்து விடாதீர்கள் என்று ரொம்பவும் வெள்ளந்தியாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சக போட்டியாளர்கள் இவரிடம் செய்யும் செயலை பார்த்ததும் இவர் வெறுப்படைந்து சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி வருகிறார்.

வெகுளித்தனமான கேரக்டர்
ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் தாமரைச்செல்வி, இதுவரைக்கும் ஒரு சில பகுதிகளுக்கு பரிச்சயமான நபராக இவர் இருந்திருக்கிறார். தற்போது தமிழ் மக்களில் பலருக்கும் பரிச்சயமான ஒருவராக இவர் மாறினாலும் இவர் சில நேரங்களில் செய்யும் செயல்களால் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து வருகிறார். இவருடைய பேச்சை பார்த்தும், நடவடிக்கைகளை பார்த்தும் பல ரசிகர்கள் இவர் வெள்ளந்தியான வெகுளி என்று இப்ப வரைக்கும் கூறிவருகின்றனர்.

படபடவென பேச்சு
இந்த சீசனில் அறிமுகமாகியிருக்கும் போட்டியாளர்கள் பலருக்கும் இதற்கு முன்பு ஒளிபரப்பான சீசன் களை பார்த்து நன்றாகவே ரெடியாகி தான் இந்த சீசனுக்கு வந்து இருக்கின்றனர். ஆனால் இவர் இப்படி அல்ல என்று இவருக்கு இவருடைய ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அதுவும் தன்னுடைய படபடவென பேச்சால் மனதில் இருப்பதை கொட்டி தீர்த்து விடுகிறார்.

ராஜுவின் அறிவுரை
நேற்றைய பிக் பிக் பாஸில் போட்டியாளர்கள் இந்த வீட்டுக்குள் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு அறிவுரைகளும், சில டயலாக்குகளையும் கூறிவந்தனர். அதில் ராஜு தாமரை இடம் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று அதிகம் பிரபலமாகாத நீ இந்த இடத்திற்கு வந்து இருக்கிறாய். இது உன்னுடைய திறமையை நிரூபித்து உன்னைப்போல இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதில் சிறப்பாக செயல்படுவதற்காக தான் நீ உன் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். கோபப்பட்டு கொண்டு பேசாதே என்று இவர் கூறிய அறிவுரையை கேட்டு தாமரையின் முகம் சுருங்கி போனாலும், ரசிகர்கள் நல்ல வார்த்தை தான் சொன்னீர்கள்...எங்கள் மனதில் இருப்பதை சொல்லி விட்டீர்கள் என்று ராஜூவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications