முன்னணி சீரியலில் களம் இறங்கப் போகும் ராஜு...எதிர்பாராத ட்விஸ்ட்டால் திணறும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ராஜு அறிமுகமாக இருக்கிறார்.
தற்போது விஜய் டிவி சீரியல் அணியினருடன் ராஜு எடுத்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
போட்டோஸ்களால் அதிர்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜு முதல் முதலில் அறிமுகமாகும் சீரியல் பற்றி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் விஜய் டிவியில் ஏற்கனவே நடித்து வந்த சீரியலில் எப்போது அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் போட்டோக்கள் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு சில ரசிகர்கள் திரைப்படத்தில் எதிர்பார்த்திருந்த ராஜு மீண்டும் சீரியலுக்கு வந்து விட்டாரே என்று வருத்தத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
ராஜூ சின்னத்திரையில் காமெடி நடிகராக அறிமுகமாகி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காமெடி நடிகராகவும், கதாநாயகனாகவும் மாறி இருக்கிறார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பு காரணமாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகு விட்டார். ஐந்தாவது சீசனில் வின்னராக இவர் ஜெயித்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார். சீரியலில் ஏற்கனவே இவருக்கு அதிகமான பெண் ரசிகர்கள் இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு ரசிகர்கள் பலர் ஆர்மி அமைத்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
தமிழும் சரஸ்வதியும் அணியினருடன் சந்திப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அதிகமான ரசிகர்கள் இவர் எப்போது மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து கொண்டு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் மழுப்பலான பதில்களை கூறிக் கொண்டிருந்தாலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதி சீரியல் அணியினருடன் போட்டோ எடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒருவேளை அப்படி இருக்குமோ
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமணம் தற்போது தான் நடைபெற்றது. கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருமண விழாவில் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய திருமண வீடியோவிற்க்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வித்தியாசமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதில் கூட ஏற்கனவே ராஜு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் போஸ்ட் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் தீபக் மற்றும் கதாநாயகனின் தம்பி மற்றும் தீபக் நண்பர் முதலியவர்களுடன் ராஜூ எடுத்த போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் இவர் இந்த சீரியலில் அறிமுகமாக போகிறாரா?? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதை பற்றி ராஜூ எந்த எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்றாலும் விரைவில் தகவல்கள் உறுதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.