பிறந்தநாளில் ரசிகர்களின் செய்கையால் திக்குமுக்காடிப் போன ரியோ... உருக்கமான செயல்
சென்னை: தன்னுடைய பிறந்த நாளில் ரசிகர்கள் செய்ததை நினைத்து ரியோ ராஜ் உணர்ச்சிவசப்பட்டு உள்ளார்.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிகமாக சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சின்னத்திரையில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் தான் ரியோ .இவர் 2013ஆம் ஆண்டு சீரியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். அதற்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் .சன்மியூசிக் நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கியாகவும் பணிபுரிந்துள்ளார். கல்லூரி காலங்களில் இவர் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

ரசிகர்களை கவர்ந்த சரவணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் பலசீசன்களாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் 2016 முதல் 2018 வரைக்கும் சரவணன் மீனாட்சி மூன்றாவது பாகம் ஒளிபரப்பாகி வந்தது .இந்த கதையில் சரவணன் கேரக்டரில் இவர் நடித்துள்ளார். மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பியதும் இவருக்கு அமோகமான வாய்ப்பு வரவேற்பு கிடைத்திருந்தது. ஒவ்வொரு சீசனிலும் உள்ள சரவணன் கேரக்டரை ரசிகர்கள் ரசித்ததுபோல இவருடைய கேரக்டரையும் ரசிகர்கள் நன்றாகவே ரசித்து வந்தனர். அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களிலும் துணை நடிகராகவும், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறார்.

கண்ணியமான அறிமுகம்
சத்ரியன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானதை தொடர்ந்து இவருக்கு, சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் இவர் நடித்த தன் மூலமாக 'கண்ணியமான அறிமுகம்' என்று இவர் விருதுகளை வாங்கியுள்ளார். அதற்குப் பிறகும் பிளான் பண்ணி பண்ணனும் என்னும் திரைப்படத்தில் இவர் நடித்து முடித்திருக்கிறார். ஆனால் அந்த திரைப்படம் கொரானா காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் தான் இருந்து வருகிறது.

திகைக்க வைத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மீண்டும் இவருக்கு ஒரு திருப்புமுனையாக விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நான்காவது சீசனில் இவர் கலந்துகொண்டதும் இவருடைய கலகலப்பான காமெடி ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. ஒரு சில நேரங்களில் இவர் அர்ச்சனாவோடு சேர்ந்து குரூப்பாக செயல்படுகிறார் என்று சிலர் கூறி வந்தாலும், இவருடைய தனித்துவம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அதிகமான வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவருக்கு தொடர்ந்து வரும் வாழ்த்துக்கள பார்த்து திகைத்துப் போய் இருக்கிறார்.

எதிர்பாராத மகிழ்ச்சி
இதுவரைக்கும் எந்த ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அதிகமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனக்கு வந்துள்ளதாகவும், இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். இவருடைய போஸ்ட் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் பலருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தனது வாழ்த்துக்களை கூறும் ரசிகர்களுக்கு இவரும் மறக்காமல் நன்றிகளைக் கூறி அனுப்பி வருகிறார். சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக செய்யும் செயல் இவருக்கு மேலும் அதிகமான ரசிகர்களை கொடுக்கும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
-
தேர்தல் பற்றி விஜய் பேசிய டயலாக், சிறகடிக்க ஆசையில் ரீ கிரியேட்! இதை கவனிச்சீங்களா? இனிவரும் பிரச்சனை? -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications