Singapenne Serial: சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்! மனைவி யார் தெரியுமா? இந்த விஜய் டிவி நடிகை தான்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் தான் டிஆர்பியில் டாப் 3 இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அன்பு கேரக்டரில் நடிகர் அமல்ஜித் நடித்து வருகிறார். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இது குறித்து அமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பொதுவாக சீரியல்களில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்பவர்களை பார்த்திருப்போம். அதேபோலத்தான் நடிகர் அமலும் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகையை தான் காதலித்து வருகிறாராம். இவர்கள் இருவருக்கும் தான் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அமல் சமீபத்தில் சிங்க பெண்ணே சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் அனுதாபத்தை பெற்று இருக்கிறார்.

அன்பு தம்பி பாவம்... இந்த ஆனந்தி அன்பு தம்பி வைத்திருக்கும் காதலை புரிஞ்சுக்க மாட்டேங்கிறதே.. என்று பல கமெண்ட்டுகள் வருகிறது. அந்த அளவிற்கு அன்பு கேரக்டராகவே அமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் இதற்கு முன்பு அம்மன் என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் அதற்கு முன்பு இவருக்கு சீரியல் மட்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தான் அலைந்து கொண்டு இருந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் கேட்டரிங் சர்வீஸ் மற்றும் புட் டெலிவரி வேலை எல்லாம் பார்த்து எப்படியாவது சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்ட அமலுக்கு அம்மன் சீரியல்தான் ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரத்தை கொடுத்தது. அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த பவித்ராவை தான் காதலிக்க தொடங்கினாராம். முதல் சீரியலில் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் அடுத்த வருடத்தில் இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக அமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
பவித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே என்ற சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை பூர்விகமாக கொண்ட அமல் முதலில் மலையாள சீரியல்களில் நடித்து வந்தாலும் இப்போது சிங்க பெண்ணே சீரியல் மூலமாக ரசிகர்கள் தனக்கு கொடுத்த அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதிலும் அம்மன் சீரியல் முடிவடைந்த பிறகு சில மாதங்களாக தான் வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், அப்போது கூட பவித்ரா தான் தன்னை முழுமையாக கவனித்துக் கொண்டார் என்றும் கூறியிருக்கிறார். அதோடு ஒரு சீரியலில் நீங்கதான் ஹீரோ என்று கமிட் செய்து விட்டார்கள் அதற்காக நானும் 40 ஆயிரத்திற்கு மேலே காஸ்ட்டும் எல்லாம் வாங்கி விட்டேன்.

ஆனால் சூட்டிங் தொடங்குவதற்கு முதல் நாள் முன்பு கால் பண்ணி சேனல் தரப்பில் இருந்தே ஒரு ஹீரோவை கொண்டு வந்துட்டாங்க நீங்க வேண்டாம் தம்பின்னு சொல்லிட்டாங்க அதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்றம் தெரியுமா? அந்த ஏமாற்றம் வலி எல்லாம் இப்போ சிங்க பெண்ணே சீரியல் மூலமா காணாம போயிடுச்சு என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அமல் அடிக்கடி பவித்ராவுடன் புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை பார்க்கும் போது இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் கூட அம்மன் சீரியல் புகைப்படங்கள் என்று தெரிகிறது. அதோடு அடுத்த வருடத்தில் தான் திருமணம் செய்யப் போகிறோம் என்றும் அமல் பேசி இருக்கிறார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications