தாமரையை காப்பாற்ற நினைக்கும் சுருதி...இது வேற லெவல் விளையாட்டு தான்
சென்னை: சுருதியின் மனமாற்றத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார்களாம்.
முதல்முறையாக சுருதி செய்த செயல் ரசிகர்களை வியப்படைய வைத்திருக்கிறது.
அதுவும் தாமரை விஷயத்தில் இவர் இந்த மாதிரி ஒரு முடிவு சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லையாம்.

புது விளையாட்டு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளி பங்க்ஸன்களை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இதுவரைக்கும் தமக்குப் பிடிக்காத போட்டியாளர்களை எலிமினேஷன் செய்து வந்த போட்டியாளர்களுக்கு தற்போது வித்தியாசமான டாஸ்க் கொடுத்து இருக்கிறது. இதை பார்த்ததும் ஒரு சில போட்டியாளர்கள் எப்படி விளையாட வேண்டும் என்று கூட தெரியவில்லை என குழம்பி இருக்கிறார்கள். அதற்கு விளக்கமான தெளிவுகளை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

புது டாஸ்க்
முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் யார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்டு அவர்களின் புகைப்படம் இருக்கும் ராக்கெட் வெடியை கொளுத்த சொல்லியிருக்கிறது. அதிகமாக தமக்குப் பிடிக்காத போட்டியாளர்களை வீட்டை விட்டு வெளியேற்ற நினைக்க காரணமான விஷயங்களை கூறி அவர்களின் போட்டோவை எரிப்பது போன்ற டாஸ்க்களை தான் வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் தற்போது வித்தியாசமாக பிக்பாஸ் செய்திருக்கின்றது.

சுருதியின் கருத்து
ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு பிடித்த சக போட்டியாளர்களில், இரண்டு போட்டியாளர்களின் பெயர்களைக் கூறி அவர்கள் இந்த வீட்டில் கடைசி வரைக்கும் அதனால் இருக்க வேண்டும் என்று காரணம் கூறி வருகின்றனர். இதில ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது சுருதியின் கருத்து தான். இவர் இப்படி சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் பலர் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

என்னவா இருக்கும்
போன வாரம் முழுக்க சுருதி, தாமரையின் பஞ்சாயத்து தான் பெரிய பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டிருந்தது. இதற்கு கமல் வந்து கூட சரியான தீர்ப்பு சொல்லாமல் நழுவிப் போய் விட்டார். இந்த நிலையில் தன்னுடைய தவறை உணர்ந்து சுருதி, தாமரை இந்த வீட்டில் அதிக நாட்கள் இருக்க வேண்டும் என்று அவருக்கு ஓட்டளித்து இருக்கிறார். இது இவருடைய மனம் மாற்றமா?? அல்லது தன்னுடைய பெயர் கெட்டு போய் விடக்கூடாது என்று செய்யும் செயலா?? என ரசிகர்கள் குட்டையை குழப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications