படிக்க வைக்கவில்லை..படிக்க வைத்து இருந்தால் நன்றாக படித்து இருப்பேன்..தாமரையின் ஏக்கம்
சென்னை: படிப்பின் அருமை கிடைக்கவில்லையே என ஏக்கத்தோடு தாமரைச்செல்வி பேசியுள்ளார்.
இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக கிடைக்காத கல்வியை நினைத்து இப்போதும் மனம் கலங்கிய தாமரை செல்விக்கு ஆறுதல்களை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
வாழ்வின் எவ்வளவு பெரிய இடத்தை அடைந்தாலும் கல்வி என்றுமே சிறப்பு தான் என்பதை தற்போது தாமரைச்செல்வி நிரூபித்துள்ளார்.

தாமரையின் ஃபீலிங்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் ஒருசில செயல்கள் ரசிகர்கள் மனதை அதிகமாக கவர்ந்து விடும். அந்த மாதிரிதான் நேற்றைய எபிசோட்டில் எதார்த்தமாக தாமரைச்செல்வி பேசிய வார்த்தைகள் பலருடைய மனதையும் வருடி விட்டது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ரசிகர்கள் அதிகமாக ரசித்து வரும் நிலையில் பலருக்கும் பரிச்சயமான மற்றும் பிடித்த போட்டியாளராக இருக்கும் தாமரைச்செல்வி தன்னுடைய மனக்குமுறல்களை ஃபீலிங்கா காட்டியிருக்கிறார்.

ரசிகர்களின் மனதை பாதித்துவிட்டது
என்னதான் ஒருவர் சந்தோஷமாக இருந்தாலும் ஆரம்பகட்டத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் யாராலும் மறக்க முடியாது. அது மட்டுமல்லாமல் அந்த கஷ்டங்களால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையை ஒரு சில காலங்களுக்குப் பிறகு நினைத்து பார்க்கும் வலி மிகவும் பெரியது தான். அதை தற்போது தாமரைச்செல்வி தன்னுடைய முகத்தில் காட்டியுள்ளார். அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஏற்கனவே தாமரைச்செல்வி தன்னுடைய கஷ்டங்களை அனைவருக்கும் கூறியிருந்தாலும் நேற்றைய எபிசோட்டில் அவர் பேசிய வார்த்தைகள் பலருடைய மனதையும் பாதித்து இருக்கிறது.

கிடைக்காத கல்வி செல்வம்
ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே பரிச்சயமாக ஒரு நடன கலைஞராக இருந்த தாமரை செல்வி தற்போது பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக இருந்தாலும், இவர் குழந்தையாக இருக்கும்போது கிடைக்காத கல்வி நினைத்து தற்போதும் மனதுருகி இருப்பதை பார்த்து பலர் வேதனை அடைந்து இருக்கின்றனர். என்ன தான் இவர் சிரித்து பேசியும், சண்டை போட்டும் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்டிக்கொண்டு இருந்தாலும் ஒரு சில நேரங்களில் இவர் வெகுளித்தனமாக செய்யும் ஒரு சில செயல்கள் பலரையும் கவர்ந்து விடுகிறது. அந்த மாதிரி இப்போதும் தாமரை பலரும் யோசிக்கிற ஒரு செயலைத்தான் செய்து இருக்கிறார்.

ஏங்கும் மனது
இவருடைய இளமைக் காலத்தில் வீட்டில் வசதி இல்லாததால் இவருடைய பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லையாம். அதனால் நேற்றைய எபிசோட்டில் இவர் சிபியிடம் நானும் படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்தால், நன்றாக படித்து இருப்பேன் என்று கூறியிருக்கிறார். அப்போ எங்க வீட்டில் படிக்க வைக்க முடியாததால் தான் நான் படிக்கவில்லை என்று வேதனையை தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் பல பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை படிக்க வைப்பதற்காக எவ்வளவோ போராடிக் கொண்டு இருந்தாலும் ஒரு சில குழந்தைகள் படிப்பை ஓட்டி அடிக்க நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருடைய இந்த உருக்கமான வார்த்தை பலருடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications