ப்ரமோவில் வருவதற்காக தான் இப்படி பண்ணுகிறாரா அபிஷேக்...காண்டாகும் நெட்டிசன்கள்
சென்னை: தன் வாயை திறந்து நெட்டிசன்களிடம் வசமாக மாட்டியிருக்கிறார் அபிஷேக் ராஜா.
என்ன பண்ணினாலும் அதில்ஒரு காரணம் இருக்கும் என்பதை தற்போது ரசிகர்களும் புரிந்துவிட்டனர்.
ஏற்கனவே ரசிகர்கள் இதையே சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது அபிஷேக் தன்னுடைய வாயால் தானே ஒப்புக்கொண்டது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா? பாலியல் வழக்கில் எஸ்.பிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
பரபரப்பை ஏற்படுத்தும் அபிஷேக்
பலர் தங்களுடைய திறமையை காட்டி பிரபலம் ஆகி விடுகின்றனர். ஆனால் சிலர் தன்னைப்பற்றி நெகட்டிவான சிந்தனைகளை அடுத்தவர்களிடம் உருவாக்கி பிரபலமாகி விடுகின்றனர். இதில் அபிஷேக் இரண்டாம் கேரக்டரில் வந்துவிடுகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் ஆரம்பத்திலிருந்தே அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு கேரக்டராகவே அபிஷேக் இருந்து வருகிறார். இவர் செய்யும் சின்னச்சின்ன செயல்களும் கூட சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
யூடியூபில் அறிமுகம்
அதுமட்டுமல்லாமல் இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பல சமூக வலைத்தள ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆனால் இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறார். அதில பல வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து இவரும் பிரபலமாகி இருக்கிறார். ஆனால் பல யூடியூபர்கள் பாசிட்டிவ் கமெண்ட் களால் பிரபலமாகி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் இவரை போல நெகட்டிவ் கமெண்ட்களால் பிரபலமடைந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே 8இவருக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் இருந்து வருகின்றனர்.
கடுப்பான ரசிகர்கள்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்களை பெறுவதற்காகவே பார்த்து பார்த்து வேலை செய்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எப்படியும் ரசிகர்கள் தன்மை பற்றி பேச வைத்து விட வேண்டும் என்பதில் கவனமாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் ப்ரமோ வருவதுபோல நிகழ்ச்சியில் இவருடைய செயல்பாடுகள் இல்லை என்றாலும் ப்ரமோவில் மட்டும் சண்டைக்கு வாங்க என்று வாலண்டரியாக யாரிடமாவது கத்தி கொண்டு இருக்கிறார். இதை பார்த்ததும் பலர் கடுப்பாகி இருக்கின்றனர்.
அதிகரிக்கும் நெகட்டிவ் கமெண்டுகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் மூன்று ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் எப்படியும் இரண்டு ப்ரமோக்களில் இவருடைய ஆக்டிங் தான் வருகிறது. இதை பார்த்ததும் நெட்டிசன்கள் கலாய்த்து சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதுவும் இவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வருகிறது. அதையெல்லாம் இவர் படிக்கவில்லை என்றாலும் இவர் மீது இருக்கும் கோபங்களை அப்படியே கமெண்டுகளில் பலர் கொட்டி விடுகின்றனர். இன்றைய ப்ரமோ களில் கூட இவருடைய முகமே வந்து கொண்டிருப்பதால் இவர் ப்ரமோவில் வருவதற்காக தான் இப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று கடுப்பாகி பலர் கூறி வருகின்றனர்.