எளிமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...அனுபவங்களை உருக்கமாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திய விஜே அஞ்சனா
சென்னை: பிரபல விஜே அஞ்சனா தனக்கு கோரானா பாதித்துள்ளதை பற்றி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
பரவிவரும் கோரானாவை யாரும் எளிமையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அதைப்பற்றி தெளிவாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

அதிகரிக்கும் தொற்றுநோய்
தற்போதைய சூழ்நிலையில் பொது மக்களையும் பிரபலங்களையும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் கொரானாவின் பிடியிலிருந்து பலரும் தப்பிக்க முடியாமல் தான் தவித்து வருகின்றனர். பல நாடுகளின் தலைவர்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாளுவதில் திணறிக்கொண்டிருக்கும் போது மக்களாகிய அனைவரும் பாதுகாப்புடனும், விழிப்புடன் செயல்பட்டால் மட்டும் தான் இதனை ஒழிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த இருந்தாலும், கட்டுக்கடங்காமல் நாளுக்குநாள் கோரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது சாதாரண மனிதர்களை மட்டுமல்லாமல் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

அதிகரிக்கும் விழிப்புணர்வுகள்
பணம் இருக்கும் பணக்காரர்களுக்கும் அன்றாடம் வேலை செய்து சாப்பிடும் ஏழைகளுக்கும் நிலமை ஒன்றுதான் என்று இந்த கொரானா கோரத்
தாண்டவம் ஆடிவருகிறது. கோடிக்கணக்கில் பணம் இருந்தும் எத்தனையோ உயிர்களை பலரும் இழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இதற்கான விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாங்கள் அனுபவித்த வேதனைகள் மற்றும் அதனை சரி செய்து கொண்ட செயல்களைப் பற்றியும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பிரபலங்கள் பலரும் தெரியப்படுத்தி வருகின்றனர்.

விஜே அஞ்சனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
சினிமா துறையில் இருப்பவர்களையும் இது விட்டுவைக்கவில்லை. பலர் தொடர்ந்து இதில் பாதிக்கப்பட்டு தங்களுடைய நிலைமையை ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பது போல விஜே அஞ்சனாவும் தற்போது செய்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தாலும், பலர் இவரக்கு ஆதரவு கூறி வருகின்றனர். சன்மியூசிக் மூலமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பலருக்கும் பரிச்சயமான ஒரு தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜே அஞ்சனா 90கிட்ஸ் களின் பேவரைட் விஜே ஆக இருந்து வருகிறார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்
தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் தனக்கு கோவிட் பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வாக இருந்தது, காய்ச்சல் வந்ததும் 2 ரேபிட் டெஸ்ட் செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று வந்தது .ஆனால் RTB பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அறிகுறிகள் தோன்றுவதற்கு 3 முதல் 14 நாட்கள் வரை ஆகின்றது. அதனால் அறிகுறிகள் தோன்றினால் உடனே டெஸ்ட் எடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபத்திய மாறுபாடு பரிசோதனை கூடங்களில் விரைவில் காட்டப்படுவதில்லை. இந்த நேரத்தில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கின்றது. அதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications