இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. ஆசை நிறைவேறி விட்டது. விஜே தீபிகாவின் உருக்கமான வார்த்தைகள்
சென்னை: விஜே தீபிகா தற்போது தன்னுடைய மகிழ்ச்சியை கூறி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
பல நாட்களாக ஆசைப்பட்டது தற்போது நிறைவேறிய மகிழ்ச்சியில் தீபிகா ஆனந்த கண்ணீரை சிந்தி இருக்கிறார்.
தனது சொந்த உழைப்பிலே அவர் கட்டிய வீடு பற்றி உருக்கமான தகவல்களை கூறியுள்ளார்.

என்ன ஒரு தத்துவம்
பிடிச்ச வேலை போயிட்டு என்றாலும், பிடிச்ச நபர் நம்மளை விட்டு சென்று விட்டாலும், பிடிச்ச வீடு, பிடிச்ச கார் எது நம்ம விட்டு சென்று விட்டாலும் அடுத்தடுத்து நம்மளுடைய வாழ்க்கையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது நம்முடைய சந்தோஷம் தானாக வந்துவிடும். கடந்து போனதை நினைத்து எப்போதும் வருந்தி கொண்டு இருக்க கூடாது. இருப்பதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பல தத்துவங்களை உதிர்த்திருக்கிறார். விஜே தீபிகா இவருக்கு இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு அறிவா.!!?? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். தொகுப்பாளர் என்றால் சும்மாவா இப்படி எல்லாம் பேச வேண்டாமா??என்று ஒருத்தரப்பு ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.

கிராமத்து பொண்ணு
திருநெல்வேலி அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்த விஜே தீபிகா தொகுப்பாளராக வேண்டும் என்று தான் சென்னை வந்துள்ளாராம். வீட்டில் படிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு சென்னை வந்த இடத்தில் படித்துக் கொண்டு ஒவ்வொரு டிவி சேனலாக ஏறி இறங்கி இருக்கிறார். இவர் வாய்ப்புக்காக சென்ற போதெல்லாம் அனைத்து கதவுகளும் மூடிக்கொண்டதாம். ஆரம்பத்தில் எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற அடிப்படை கூட எனக்கு தெரியாது அதனால் பலரும் என்னை பார்த்ததுமே நிராகரித்து விட்டார்கள் என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்கு முன்பு விஜேவாக ஒரு சேனலில் இவர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அப்போது சில போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறாராம் . அதன் மூலமாகத்தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு காலேஜ் படிக்கும் போது பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தியின் தோழியாக நடிக்க வாய்ப்பு இருந்ததாம். ஒரு சில சீன்களில் நடித்து இருந்ததாலோ என்னவோ இவருக்கு நடிப்பின் மீதும் பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக பலருடைய மனதையும் கவர்ந்து விட்டார். அதுவும் இவர் இந்த சீரியலில் இருந்து விலகியதும் இவருடைய ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வந்தார்கள்.

தீபிகா ஹாப்பி அண்ணாச்சி
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு இதயத்தை திருடாதே எனும் கலர்ஸ் தமிழ் சேனல் சீரியலில் இவர் நடித்திருக்கிறார். பல நாள் ஆசை நிறைவேறிவிட்டதாக தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் முதல் முறையாக தன்னுடைய சொந்த உழைப்பில் சிறிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதுவும் அவர்கள் குடும்பமே நினைத்த மாதிரி அமைந்திருக்கிறது என்று இவர் மகிழ்ச்சியாக ரசிகர்களிடம் கூறியிருக்கிறார். இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன், பல நாள் ஆசை நிறைவேறிவிட்டது என்று உருக்கமாக கூறியுள்ளார். இவர் கட்டியிருப்பது சாதாரண கூலிங் சீட் போட்ட வீடு தான். ஆனாலும் தன்னுடைய உழைப்பின் மூலமாக இந்த வீட்டை கட்டிய மகிழ்ச்சியில் இதற்குப் பிறகு இதைவிட பெரியதாக மாடி வைத்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இவருடைய ஆசைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications