முனீஸ் ராஜா,ராஜ்கிரண் பற்றி கூறிய உண்மைகள்.. குடும்ப பிரச்சனை இப்போ வேறு விதமாக மாறி இருக்கிறதே!?
சென்னை: சின்னத்திரை நடிகர் ஆன முனீஸ் ராஜா தன்னுடைய மனைவிக்கும் ராஜ்கிரணுக்கும் என்ன உறவு என்பது குறித்தும் தன் மீது தற்போது வழக்கு தொடர்வதற்கன காரணத்தை பற்றியும் கூறி இருக்கிறார்.
நடிகர் ராஜ்கிரண் தூண்டுதலின் பேரில் தன்னுடைய மனைவியின் அம்மா இப்போது தன்னுடைய குடும்பத்தின் மீதும் தன் மீதும் தொடரப்பட்ட கொடுக்கப்பட்ட வழக்குக்காக தான் அலைந்து கொண்டிருப்பதாகவும் வேதனையோடு தெரிவித்து இருக்கிறார்.

சொந்த மகள் இல்லை
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவின் திருமணம் பலருக்கும் தெரிந்ததுதான். அவர் நடிகர் ராஜ்கிரண் வளர்ப்பு மகளை திருமணம் செய்திருந்தார் என்ற செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் தன்னுடைய மனைவி ராஜ்கிரண் "சொந்த மகள் இல்லை", "ராஜ்கிரனின் மனைவியோட மகள்" என்று அனைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார். முனீஸ் ராஜாவின் மனைவி பிரியாவின் சொந்த அப்பா இப்போ இவர்கள் கூடத்தான் இருக்கிறாராம். அவரும் பிரியாவின் சொந்த அம்மாவான பத்மஜா என்ற கதீஜாவும் 18 வருஷமாக கணவன் மனைவியாக வாழ்ந்தார்களாம். ஆனால் அதற்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பத்மஜா தன்னுடைய கணவரை பிரிந்து நடிகர் ராஜ்கிரணுடன் சேர்ந்து வாழ்ந்தாராம். அப்போ முனீஸ் ராஜாவின் மனைவி சின்ன குழந்தையாம்.

கம்ப்ளைன்ட் கொடுக்க காரணம்
அப்போது சின்ன குழந்தையாக இருந்த பிரியாவையும் அவர்கள் கூடவே கூட்டிட்டு போயிட்டாங்களாம். அப்ப பத்மஜா மட்டும் இல்லாமல் பிரியாவும் நிறைய நகைகளை அணிந்திருந்தாராம். அந்த நகைகளுடன் தான் ராஜ்கிரணுடன் அவர் போய்விட்டாராம். இப்போ ராஜ்கிரண், பிரியா என்னோட மகளே இல்லை என்று சொல்லிவிட்ட பிறகு அவங்க போட்டு இருந்த நகைகள் மட்டும் எதற்கு அந்த வீட்டில் இருக்கணும் என பிரியாவின் சொந்த அப்பாவும் பிரியாவும் சேர்ந்து அந்த நகைகளை கேட்டார்களாம். அதுக்கு தான் இப்போது ராஜ்கிரண் சொல்லி பத்மஜா இவர்களின் மீது புகார் தந்து இருப்பதாக முனீஸ் ராஜா குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

காவல் நிலையத்துக்கு வரவில்லை
அது மட்டுமில்லாமல் ராஜ்கிரண் கொடுத்த புகாரில் மீதான விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு முனீஸ் ராஜாவும் அவருடைய மனைவியான பிரியாவும், முசிறி காவல் நிலையம் சென்ற போது ராஜ்கிரண் தரப்பிலிருந்து யாரும் வரவில்லையாம் மீண்டும் இன்று முனீஸ் ராஜா மற்றும் அவருடைய மனைவி ஆஜராகி இருக்கிறார்கள். அதற்கு முன்பு நேற்று முனீஸ் ராஜாவின் மனைவியான பிரியா தன்னுடைய அம்மா மற்றும் ராஜ்கிரண் பற்றி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஒளிபரப்பு தடுக்கப்பட்டதா
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இவர்களுடைய திருமணம் எளிமையாக முடிவடைந்த நிலையில் தற்போது முனீஸ் ராஜா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இதனால் ஜீ தமிழில் இருந்து இவர்களுடைய திருமணத்தை நிஜ திருமணம் போல நடத்தி வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என ராஜ்கிரண் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முனீஸ் ராஜா தரப்பினர் கூறியிருந்தனர். ஆனாலும் அந்த சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.












Click it and Unblock the Notifications