சுற்றுலா துயரம்: கோவையில் இருந்து சென்ற கேரளா அரசு பேருந்து மீது பள்ளி பேருந்து மோதி 9 பேர் பலி!
பாலக்காடு: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த போது பாலக்காடு அருகே பள்ளி பேருந்து விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கேரளாவின் எர்ணணாகுளம் பகுதி முலந்துருத்தி Baselious School பள்ளியின் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் 42 பேருடன் பள்ளி பேருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணமாக சென்று கொண்டிருந்தது. இவர்களில் 26 பேர் மாணவர்கள்; 16 பேர் மாணவிகள்.

அப்போது வடக்கஞ்சேரி என்ற இடத்தில் தமிழகத்தின் கோவையில் இருந்து கேரளாவின் கோட்டாரக்கர நோக்கி கேரளா அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கேரளா அரசு பேருந்தை முந்தும் வகையில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் வேகமாக இயக்கி உள்ளார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக அரசு பேருந்து மீது பயங்கர சப்தத்துடன் மோதியது.
இந்த கோர விபத்தில் பேருந்து பயணிகள் 2 பேர், பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் என மொத்தம் 7 பேர் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 16 பேர் பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள், ஆலத்தூர், பாலக்காடு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கேரளா அரசு பேருந்து ஓட்டுநர் சுமேஷ் கூறுகையில், பள்ளிக்கூட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாக வந்தார். அவரால் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பேருந்து மீது மோதியது என்றார். அப்பகுதியில் மீட்பு பணிகள் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.
இச்சம்பவம் குறித்து பெற்றோர் கூறுகையில், பள்ளி பேருந்து ஓட்டுநர் வேளாங்கன்னி சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு அசதியாக இருந்துள்ளார். அவரையே நீலகிரிக்கும் சுற்றுலா செல்ல பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்தது. இதுதான் விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டி உள்ளனர். இவ்விபத்து கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் கூறுகையில், எங்கள் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் 80-90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தார். இவ்வளவு வேகமாக எதுக்கு போகனும்? என நாங்கள் கேட்டோம். ஆனால் ஓட்டுநருடன் வந்த நபர், அனுபவம் மிக்கவர், சமாளித்துவிடுவார் என சொன்னார். இப்போது இவ்வளவு பெரிய துயரம் நிகழ்ந்துவிட்டது என வேதனை தெரிவித்தார். ஜிபிஎஸ் பதிவுகளும், பள்ளி பேருந்து அதிவேகமாக சென்றதாகவே உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications