இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி தேவை இல்லை.. சிந்திக்க கூடியவர் தேவை! யஷ்வந்த் சின்ஹா கருத்து
திருவனந்தபுரம்: இந்தியாவுக்கு சுதந்திரமாக சிந்தித்து பேசும் குடியரசுத் தலைவரே தேவை என்றும், ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவையில்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.

வேட்பாளர்கள் யார்?
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். முறையே இவர்கள் இருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆதரவு திரட்டும் யஷ்வந்த் சின்ஹா
இதனைத்தொடர்ந்து மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனையொட்டி இன்று தமிழ்நாடு வரும் யஷ்வந்த் சின்ஹா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா கருத்து
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, இந்தியாவுக்கு சுயமாக சிந்தித்து பேசுவதோடு, அரசியலைப்பின் பாதுகாவலராக செயல்படும் குடியரசுத் தலைவரே தேவை. வெறும் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவை இல்லை. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள் பெருமை கொள்ளும் வகையில், நான் செயல்படுவேன் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டம்
மேலும், அக்னிபாத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, மத்திய பாஜக அரசால் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடமும் எவ்வித ஆலோசனையும் செய்யப்படவில்லை. அனைத்து விஷயங்களையும் வேகமாக செய்ததால், நாடு தழுவிய போராட்டங்கள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண்பதற்கான வழி இதுவல்ல என்றும் தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications