இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி தேவை இல்லை.. சிந்திக்க கூடியவர் தேவை! யஷ்வந்த் சின்ஹா கருத்து
திருவனந்தபுரம்: இந்தியாவுக்கு சுதந்திரமாக சிந்தித்து பேசும் குடியரசுத் தலைவரே தேவை என்றும், ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவையில்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.

வேட்பாளர்கள் யார்?
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். முறையே இவர்கள் இருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆதரவு திரட்டும் யஷ்வந்த் சின்ஹா
இதனைத்தொடர்ந்து மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனையொட்டி இன்று தமிழ்நாடு வரும் யஷ்வந்த் சின்ஹா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா கருத்து
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, இந்தியாவுக்கு சுயமாக சிந்தித்து பேசுவதோடு, அரசியலைப்பின் பாதுகாவலராக செயல்படும் குடியரசுத் தலைவரே தேவை. வெறும் ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவர் தேவை இல்லை. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள் பெருமை கொள்ளும் வகையில், நான் செயல்படுவேன் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டம்
மேலும், அக்னிபாத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, மத்திய பாஜக அரசால் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடமும் எவ்வித ஆலோசனையும் செய்யப்படவில்லை. அனைத்து விஷயங்களையும் வேகமாக செய்ததால், நாடு தழுவிய போராட்டங்கள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண்பதற்கான வழி இதுவல்ல என்றும் தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications