கேரளாவில் ஓணம் பண்டிகை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை அங்குள்ள மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரம் வரை கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் களை கட்டும்.

ஓணம் பண்டிகை
கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டு பழைய உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையை மலையாள மக்கள் கொணடாடி வருகின்றனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களும் கேரள மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவர். குறிப்பாக கசவு என்று சொல்லக்கூடும் வெண்ணிற ஆடையினை உடுத்திக்கொள்வர்.

சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்
10 நாட்களும் பெண்கள் இந்த வெண்ணிற ஆடை அணிந்து கைகொட்டுக்கிளி நடனம் ஆடுவது அழகாக இருக்கும். இதேபோல் வீட்டு வாசலில், 10 நாட்களும் தொடர்ந்து அத்தப்பூக்கள் கொண்டு கோலங்கள் இடுவது கண்களை கவரும் விதத்தில் இருக்கும். ஆண்டுதோறும் இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது
அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று நடை திறக்கப்பட்டாலும் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. வரும் 10 ஆம் தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும். நடை திறக்கப்பட்டுள்ள இந்த நாட்களில் படி பூஜை, உதயஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஓணம் விருந்து வழங்கப்படும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு
ஓணம் பண்டிகை நிறைவு பெற்றதும் 10 ஆம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும். அதோடு ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளும் நிறைவடையும். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல் பகுதியில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் எனத்தெரிகிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications