கேரளாவில் மற்றொரு சாதனை.. 25 ஆண்டுகளுக்கு பின்.. முஸ்லீம் லீக் சார்பில் பெண் வேட்பாளர்
திருவனந்தபுரம்: கேரளாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்துடன் இணைந்து கேரளாவிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளுமே அங்கு முக்கிய கட்சிகளாக உள்ளன. பாஜக அங்கு மூன்றாவது அணியை உருவாக்க முயல்கிறது.
கடந்த காலங்களில் கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிக வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி
இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சி சுமார் 10 கட்சிகளுடன் வலுவான ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. கூட்டணியின் கட்சிகளின் உதவியுடன் இடதுசாரிகளை வீழ்த்திவிட முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 92 இடங்களில் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக்
இதில் முதல்கட்டமாக 25 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் அமைச்சர் வி கே இப்ராஹிம் குஞ்சு உட்பட இரண்டு பேருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல எட்டு சட்டசபை உறுப்பினர்களுக்குத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு
இதில் முக்கிய சிறப்பம்சமாக நூர்பினா ரஷீத் என்ற பெண்ணிற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கோழிக்கோடு தெற்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை
இது குறித்து நூர்பினா ரஷீத் கூறுகையில், "எங்கள் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை அனைத்திற்கும் இதுதான் பதில். நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். என் கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவேன் என்று வாக்காளர்களுக்கு உறுதி அளிக்கிறேன்" என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications