உள்ளாடையை கழட்டுங்க! கதறியழுத ‘நீட் தேர்வு’ மாணவிகள்! உள்ளாடையா? எதிர்காலமா? மிரட்டிய அதிகாரிகள்!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால் மாணவியின் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என தேர்வு மைய அதிகாரிகள் வற்புறுத்தியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஜூலை 17ஆம் தேதியான நேற்று நடத்தியது.
நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்காக பெறப்பட்ட நிலையில், அதில் 90% மாணவர்கள் மேற்பட்டோர் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தனர். அவர்களிலும் நாடு முழுவதும் 497 நகரங்களில் நடைபெறும் இந்த தேர்வை 18,72,339 மாணவர்கள் எழுதினர்.

நீட் தேர்வு
நீட் தேர்வின் போது முறைகேடுகளை தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது மதியம் 12:30 மணிக்கு வந்துவிட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்ட நிலையில், உலோகங்கள் கொண்டு செல்லப்பட அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கேரளாவில் சர்ச்சை
குறிப்பாக பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் , கைக்கடிகாரம், கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்தன. தேர்வு அறைக்குச் சென்ற மாணவ மாணவிகள் கடும் பரிசோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை தேர்வுமைய அதிகாரிகள் கழற்ற வற்புறுத்தியதாக, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாடைகள் அகற்றம்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது மகள் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா மாநிலம் மருத்துவ இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தேர்வு மைய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியே பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவியின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் மாணவியின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால் மெட்டல் டிடெக்டர் எச்சரிக்கை செய்துள்ளது.

மாணவிகள் அதிர்ச்சி
இதையடுத்து அந்த கொக்கிகளை அகற்றும்படி அதிகாரிகள் மாணவியை வற்புறுத்தியுள்ளனர். மேலும் அதனை அகற்றாவிட்டால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க முடியாது என வற்புறுத்தியதோடு உள்ளாடை முக்கியமா உங்கள் எதிர்காலம் முக்கியமா என மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர். இதையடுத்து தேர்வு எழுத வந்திருந்த பெரும்பான்மை மாணவிகள் உள்ளாடைகளை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டிய தர்ம சங்கடமான சூழல் உருவானது. இதனால் அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறிய நிலையில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி உத்தரவு
இந்த புகார் தேர்வு மைய அதிகாரிகள் மறுத்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் தந்தை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு அந்த மாணவியின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த சர்ச்சை சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதோடு விசாரணையை அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications