ஆளுநர் செய்தது தவறு தான்.. பாஜக அண்ணாமலையே இப்படி சொல்லிட்டாரே! நெருடலா இருக்கு.. சீண்ட வேண்டாம்!
திருநெல்வேலி : தமிழக அரசின் இலட்சணையை ஆளுநர் பயன்படுத்தாதது தவறுதான் எனவும், தமிழக முதலமைச்சர் ஆளுநருடன் இணக்கமாக செல்ல வேண்டும் என நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நெல்லை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு நம்ம பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் 108 பொங்கல் பானை வைத்து பொங்கலிடும் நிகழ்ச்சியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் காங்கிரஸ் ஆட்சியில் 2008இல் திட்டமிட்டபடி 4ஏ வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வருமே ஆனால் பாஜக அதனை கண்டிப்பாக எதிர்க்கும்.

அண்ணாமலை
4ஏ வடிவமைப்பு படி அந்த திட்டம் செயல்படுத்தினால் அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வேறு வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர திட்டமிருப்பதாக மார்ச் மாதம் 2018 இல் உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்துள்ளது. திமுக கொண்டு வரப் போகும் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயன்பெறப் போவது மீனவர்கள் அல்ல முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு மற்றும் கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே. பொய்யான தகவல்கள் திமுக அரசு கொண்டுவந்துள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆளுநர்கள்
நாடு முழுவதும் இப்போதுள்ள ஆளுநர்கள் தகுதியானவர்களாக உள்ளனர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஆளுநர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அவர்களே உணர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது ஆளுநர் செய்யும் செயல் ஒரு நியாயம் என்றும் இப்போது முதல்வரான பிறகு ஒரு நியாயம் என்றும் தமிழக முதலமைச்சர் சொல்லி வருகிறார்.

இசட் பாதுகாப்பு
எனக்கு வழங்கும் பாதுகாப்பு ஒருவித நெருடலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு உளவுத்துறை சொன்ன தகவலின் அடிப்படையில் இசட் கேட்டகிரி பாதுகாப்பை உயர்த்திருக்கலாம். இந்தியாவில் குறைவான நபர்களுக்கு மட்டுமே இசட் கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை ஒரு கட்டுப்பாடாக நான் நினைக்கிறேன். மத்திய அரசு உளவுத்துறை ஆய்வு செய்து சொல்லும் போது அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ஆன்லைன் ரம்மி
தமிழகத்திற்கு இதுவரை 45 மத்திய அமைச்சர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்து பல்வேறு விதங்களில் ஆய்வு செய்து அறிக்கை எடுத்து சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் வெளிப்பாடு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தெரிய வரும். தமிழக ஆளுநர் 2021 இல் 25 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை தமிழக அரசு கொடுத்துள்ள 84 மசோதாவில் 15 க்கு மட்டுமே அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவிற்கு விளக்கம் கேட்டுள்ளார்.

என்ன தவறு?
மத்திய அரசின் பட்டியலில் உள்ள ஏர்வேஸ் ஒழுங்கு படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு தெளிவு வேண்டும் என ஆளுநர் கேட்டுள்ளதால் இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசுவதில் என்ன தவறு. அதனை ஏற்பதும் ஏற்காததும் நமது செயல் தமிழ்நாடு என்பதும் தமிழகம் என்பதும் ஒரே பொருள்தான். ஆளுநர் எந்த காலகட்டத்திலும் எந்த விதமான உணர்வையும் தூண்டி பேசியதில்லை. இவர்கள் ஆளுநரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என செய்கிறார்கள்.

தவறுதான்
ஆளுநருக்கு தமிழக மக்கள் மீது அன்பு காதல் பாசம் போன்றவை உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக ஆளுநர் தமிழக அரசின் இலட்சணையை பயன்படுத்தாதது தவறுதான் .தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் இணக்கமாக செல்ல வேண்டும். தமிழகத்தில் தற்போது சட்டசபையில் நடந்ததை போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது.

மக்களாட்சி
ஆளுநர் பத்திரிகையாளரை சந்தித்து நேரடியாக பேசாமல் இருப்பதால் தான் திமுக சொல்வதெல்லாம் உண்மை போல் தெரிகிறது. மக்களாட்சிக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை மாண்பை ஏற்று ஆளுநர் இங்கு பத்திரிக்கையாளரை சந்திப்பதில்லை. ஆளுநர் பத்திரிக்கையாளரை சந்தித்தால் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரும் திமுக அரசு ஆளுநரை சீண்ட வேண்டாம் என பேசினார். பாஜகவுக்கு மதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி
மத்திய அரசின் மீது எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுக அவர்களுடைய பணியை சிறப்பாக செய்துள்ளது. கொள்கை ரீதியாக எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. 2024 தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக இல்லை. பாஜக தலைமை எனக்கு பல்வேறு பணிகளை கொடுத்துள்ளது. அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜக வளர்ந்ததாக நான் சொல்லப் போவதில்லை. எனக்கு முன்னிருக்கும் தலைவர்கள் கட்சியை நல்லபடியாக வளர்த்ததன் வளர்ச்சியே இப்போது தெரிகிறது" எனத் தெரிவித்தார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications