பிச்சு உதற போகும் மழை..இன்று முதல் ஒரு வாரத்துக்கு சம்பவம்! ரெடியா இருங்க.. வானிலை ஆய்வு மைய அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த வடகிழக்கு பருவமழை அவ்வளவாக கை கொடுக்காத நிலையில் இயல்பை விட மழை குறைவாகவே பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடுமையான குளிர் நிலவி வந்த நிலையில், தற்போது மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது. இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக குளிர் அதிகரித்திருந்த நிலையில், தற்போது மழை நிலை மீண்டும் உருவாகியுள்ளது. தெற்கு கேரளக் கடலோரத்தை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

அதேபோல், தென்கிழக்குப் பகுதியும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இந்த இரு காரணங்களால், இன்று (திங்கட்கிழமை) முதல் 10ஆம் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வந்தது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏற்கனவே லேசான மற்றும் மிதமான மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால், அந்த பகுதிகளில் காணப்பட்ட கடும் குளிர் சற்று குறைந்து, சற்று சீரான காலநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், இன்று மற்றும் நாளை, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும். அதே சமயம் உள் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை தான் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டமும் உருவாகலாம்.
சென்னை வானிலை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications